NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை
    அடுத்த செய்திக் கட்டுரை
    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை
    சித்தராமையாவின் பதிவு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கவனத்தைப் பெற்றது.

    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை

    எழுதியவர் Sindhuja SM
    Apr 19, 2023
    09:58 am

    செய்தி முன்னோட்டம்

    சூடானில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு நடுவில் கர்நாடகாவை சேர்ந்த 31 பேர் அங்கு சிக்கி இருப்பதாக நேற்று(ஏப்-18) தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இதை தொடர்ந்து, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, "சூடானில் உள்ள ஹக்கி பிக்கி சமூகத்தினர் கடந்த சில நாட்களாக உணவின்றி தவித்து வருகின்றனர், அவர்களை மீட்க அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக அரசாங்கம் ஹக்கி பிக்கிகளின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு உடனடியாக இராஜதந்திர விவாதங்களை ஆரம்பித்து சர்வதேச நிறுவனங்களை அணுக வேண்டும்." என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.

    இந்த பதிவு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் கவனத்தைப் பெற்றது.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "உங்கள் ட்வீட்டைக் கண்டு திகைத்துவிட்டேன்! உயிர்கள் ஆபத்தில் உள்ளன; இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள்." என்று கூறியிருந்தார்.

    details

    சூடானில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்: வெளியுறவுத்துறை அமைச்சர்

    மேலும்,"ஏப்ரல் 14ஆம் தேதி சண்டை தொடங்கியதில் இருந்து, கார்டூமில் உள்ள இந்திய தூதரகம் சூடானில் உள்ள பெரும்பாலான இந்திய மக்கள் மற்றும் PIOகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது." என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்விட்டரில் கூறியிருந்தார்.

    இதனால் ட்விட்டரில் ஒரு காரசாரமான சண்டை ஆரம்பமானது.

    இந்த பதிவுக்கு பதிலளித்த சித்தராமையா, "நீங்கள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருப்பதால், நான் உங்களிடம் உதவி கோரினேன். நீங்கள் திகைப்பதில் மும்முரமாக இருந்தால், எங்கள் மக்களை மீட்டெடுக்க எங்களுக்கு உதவக்கூடிய நபரையாவது காட்டுங்கள்." என்று பதிலளித்திருந்தார்.

    அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனி ஒரு ட்விட்டர் பதிவில், "பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் விவரங்கள் மற்றும் இருப்பிடங்களை பகிர்ந்துகொள்ள முடியாது. நடந்து கொண்டிருக்கும் கடுமையான சண்டைகளால் அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது." என்று தெரிவித்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    காங்கிரஸ்
    பாஜக

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 9,111 கொரோனா பாதிப்பு: 27 பேர் உயிரிழப்பு கொரோனா
    ஒரே பாலின திருமணங்களை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது: ஒரு பார்வை   உச்ச நீதிமன்றம்
    ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு  தன்பால் ஈர்ப்பாளர்கள்
    அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    காங்கிரஸ்

    ஈரோட்டில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாடு
    'பொட்டு ஏன் வைக்கவில்லை': மகளிர் தினத்தன்று பெண்ணிடம் கத்திய பாஜக எம்பி இந்தியா
    மின்வெட்டால் தான் மக்கள் தொகை அதிகரித்தது: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு இந்தியா
    பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடக்கம்: 16 எதிர்க்கட்சிகள் சந்திப்பு மோடி

    பாஜக

    5வது முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார் நெய்பியு ரியோ நாகாலாந்து
    பாஜக ஐ.டி. பிரிவினர் கட்சியில் இருந்து மேலும் 13 நிர்வாகிகள் விலகல் - அதிமுகவில் இணைந்தனர் அதிமுக
    அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக
    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025