NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஐதராபாத்தில் வாரச்சந்தை நடந்த சாலையில் திடீர் பள்ளம்-வைரலாகும் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐதராபாத்தில் வாரச்சந்தை நடந்த சாலையில் திடீர் பள்ளம்-வைரலாகும் வீடியோ
    சாலையில் விழுந்த திடீர் பள்ளம்

    ஐதராபாத்தில் வாரச்சந்தை நடந்த சாலையில் திடீர் பள்ளம்-வைரலாகும் வீடியோ

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022
    03:32 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் கோஷ்மஹால் பகுதியில் உள்ள சக்னவாடியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வாரச்சந்தை நடந்தது.

    இதனால் சாலையோரத்தில் பலர் தள்ளுவண்டிகளில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

    இதனால் கூட்டம் அங்கு அதிகம் காணப்பட்ட நிலையில், திடீரென சாலையில் நீண்டத்தூரத்திற்கு பள்ளம் ஒன்று ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டிகள், கார்கள், பைக் போன்ற இதர வாகனங்களும் பள்ளத்தில் விழுந்து சேதமடைந்தது.

    மேலும் 10ற்கும் மேற்பட்டோர் அந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர்.

    காயமடைந்தோரை அங்கிருந்தோர் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு திடிரென்று அந்த சாலையில் பள்ளம் விழுந்ததை கண்டு அங்கிருந்தோர் பீதியடைந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    பள்ளம் விழுந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்-வாகனங்களை மீட்டனர்

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பள்ளத்தில் விழுந்த வாகனங்களை மீட்டு கொடுத்தனர்.

    இது குறித்த முதற்கட்ட விசாரணையில் பள்ளம் விழுந்த அப்பகுதியில் பழமை வாய்ந்த கால்வாய் ஒன்று இருப்பதும், அதற்கு மேலேயே சிமெண்ட் ரோடு மற்றும் தார் ரோடுகள் போடப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

    அந்த கால்வாயில் தொடர்ந்து கழிவுநீர் சென்று கொண்டிருந்ததால், பக்கவாட்டு சுவர் கற்களை கொண்டு கட்டப்பட்டிருந்த பட்சத்தில், கால்வாய் ஓரம் கழிவுநீர் சென்று மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால் தான் சாலை பிளவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அந்த பள்ளம் விழுந்த இடத்தில் 3-4 மாடி கட்டிடங்கள் உள்ளதால் பாதிப்பு உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரல் செய்தி
    டிரெண்டிங்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை கமல்ஹாசன்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா

    டிரெண்டிங்

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு விஜய் டிவி
    யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஆதரவாளர்களால் பரபரப்பு-போலீசார் தடியடி டிடிஎஃப் வாசன்
    டிவிட்டரில் டிரெண்டாகும் அஜித் - 15 வருடத்தை நிறைவு செய்த அஜித்தின் பில்லா படம் தமிழ் திரைப்படம்
    மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு இன்ஸ்டாகிராம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025