NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம்
    கர்ப்பிணி பெண்ணிற்கு செலுத்தப்பட்ட எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம்

    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம்

    எழுதியவர் Nivetha P
    Dec 19, 2022
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியை சேர்ந்தவர் சரண். இவர் 2015 ஆம் ஆண்டு மாதவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

    இந்நிலையில் 40 வயதான சரணுக்கு விசாகபட்டிணத்தை சேர்ந்த 23 வயதான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

    அந்த பெண்ணை மணக்க தனது மனைவி மாதவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு விரும்பிய சரண், அதற்கான காரணத்தை தேடியுள்ளார்.

    இதனையடுத்து அவர் தனது கர்ப்பிணி மனைவியை போலி மருத்துவர் ஒருவரிடம் அழைத்து சென்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தத்தை செலுத்தியுள்ளார்.

    நாளடைவில் மாதவியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

    போலீசார் விசாரணை

    பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் கீழ் கைது செய்யப்பட்ட கொடூர கணவன்

    இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண் இது குறித்து போலீசில் அளித்த புகாரில், தனது கணவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதையடுத்து அந்த பெண்ணை மணக்க தினந்தோறும் தன்னுடன் சண்டையிட்டதாகவும்,

    தன்னிடம் இருந்து விவாகரத்து பெற, வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததோடு, தனக்கு ஆண் குழந்தை இல்லை என்று குறை கூறி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்னை ஏய்த்து சத்திற்காக ஊசி போடுவதாக கூறி அழைத்து சென்று எச்.ஐ.வி. பாதித்த ரத்தத்தை தனக்கு செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதனையடுத்து, இந்திய சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, சரணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மேற்கொண்டு வழங்க வேண்டிய மருத்துவ பரிசோதனைகளை எடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு
    வைரல் செய்தி

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    இந்தியா

    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! கூகிள் தேடல்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா
    ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை டிரெண்டிங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025