NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களவை: தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்று டி.ஆர்.பாலு கூறியதாக குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களவை: தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்று டி.ஆர்.பாலு கூறியதாக குற்றச்சாட்டு 

    மக்களவை: தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்று டி.ஆர்.பாலு கூறியதாக குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 06, 2024
    03:44 pm

    செய்தி முன்னோட்டம்

    மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, ​​நிதி வழங்குவதில் தமிழகத்திற்கு எதிரான பாரபட்சம் குறித்த விவாதங்கள் முக்கிய இடத்தைப் பிடித்ததால், காரசாரமான விவாதம் நடைபெற்றது.

    தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதியில் குளறுபடிகள் இருப்பதாக திமுக எம்பி டிஆர் பாலு கவலை தெரிவித்தபோது பிரச்னை ஏற்பட்டது.

    குறிப்பாக மிக்ஜாம் புயலை அடுத்து, மாநிலத்திற்கு போதுமான ஆதரவை வழங்க மத்திய அரசு தவறிவிட்டதாக பாலு குற்றம் சாட்டினார்.

    நிதி வழங்குவதில் பாரபட்சம் இல்லை என்றும், ஆனால் சிலர் தான் தூய்மை இல்லாத எண்ணத்தால் பிரிவினைவாத அரசியல் செய்கின்றனர் என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறினார்.

    நாடாளுமன்றம்

    மக்களவையில் என்ன நடந்தது?

    புயலுக்கு முன்னதாக போதிய எச்சரிக்கையை அளிக்கத் தவறியதற்காக பாலு மத்திய அரசை விமர்சித்தபோது, ​​மாநில அமைச்சர் எல் முருகன் அவரின் பேச்சை குறுக்கிட முயன்றார்.

    அப்போது எரிச்சலடைந்த டி.ஆர்.பாலு, "குறுக்கே தலையிட வேண்டாம். எம்.பி.யாக இருக்க தகுதியற்றவர். அமைச்சராக இருக்க தகுதியற்றவர் நீங்கள்! உட்காருங்கள்!'' என்று எல்.முருகனை வசைபாடினார்.

    டி.ஆர்.பாலுவின் இந்த கருத்து சட்டம் மற்றும் நீதி அமைச்சர் அர்ஜுன் மேக்வாலுக்கு பிடிக்கவில்லை. அவர் உடனடியாக எழுந்து பாலுவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார்.

    "எங்கள் அமைச்சரை நீங்கள் தகுதியற்றவர் என்று அழைக்க முடியாது. உங்கள் வார்த்தைகளை திரும்பப் பெறுங்கள்.. அவர்கள் இதை பதிவு செய்யாமல் நீக்க வேண்டும்" என்று மேக்வால் கூறினார்.

    நாடாளுமன்றம்

    பாஜகவினர் சித்தரித்துப் பேசுகின்றனர் - டி.ஆர்.பாலு

    நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், பாலுவை கண்டித்து, "அவரை எப்படி தகுதியற்றவர் என்கிறீர்கள்? திமுக அரசு லாயக்கற்றது, காங்கிரஸ் தகுதியற்றது, தலித் அமைச்சரை தகுதியற்றவர் என்று சொல்கிறீர்களா... ஒட்டுமொத்த எஸ்சி சமூகத்தையும் அவமதிக்கிறார்." என்று குற்றம்சாட்டினார்.

    அதனை தொடர்ந்து, இரு தரப்பு உறுப்பினர்களும் குரல் எழுப்பியதால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. "டி.ஆர்.பாலு மன்னிப்பு கேள்" என்ற கூக்குரல் அறை முழுவதும் எதிரொலித்தது.

    இந்த அமளி குறித்து பேசி இருக்கும் டி.ஆர்.பாலு, தலித் அமைச்சரை அவமதித்து விட்டதாக பாஜகவினர் சித்தரித்துப் பேசுகின்றனர் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை
    டிஆர் பாலு

    சமீபத்திய

    பாகிஸ்தான் ஹேக்கர்களின் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சைபர் தாக்குதல்களை இந்தியா எவ்வாறு முறியடித்தது? சைபர் பாதுகாப்பு
    இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது: அதற்கான காரணம் இதோ! தங்க விலை
    செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியமான உணவு
    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்

    மக்களவை

    புதிய கட்டிடத்திற்கு மாறிய மக்களவை; இப்போது பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் நிலைமை என்ன? நாடாளுமன்றம்
    'வரலாற்று நாள்': மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றம்
    இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம்: காங்கிரஸை வழி நடத்துகிறார் சோனியா காந்தி இந்தியா
    'பெண்களை வழிபட வேண்டாம், சமமாக நினைத்தால் போதும்': நாடாளுமன்றத்தில் கனிமொழி பேச்சு  திமுக

    டிஆர் பாலு

    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025