NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்-முன் ஏற்பாடுகள் தீவிரம்
    இந்தியா

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்-முன் ஏற்பாடுகள் தீவிரம்

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்-முன் ஏற்பாடுகள் தீவிரம்
    எழுதியவர் Nivetha P
    Dec 21, 2022, 08:07 pm 0 நிமிட வாசிப்பு
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்-முன் ஏற்பாடுகள் தீவிரம்
    18 அடி உயர நாமக்கல் ஆஞ்சநேயர்

    நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் செதுக்கப்பட்டு 18 அடி உயரத்தில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார். இங்கு வருடா வருடம் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த வருடம் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் நாமக்கல்லில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இதனையொட்டி, அன்று காலை 5 மணியளவில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை சாத்தப்படவுள்ளது.

    பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபாடு

    இதற்காக வடை தயாரிக்கும் பணியானது கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் துவங்கப்பட்டு 4வது நாளான இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணியில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 32 பேர் கொண்ட ஈடுபட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், தரிசன வசதி, பக்தர்கள் பாதுகாப்பு போன்ற பணிகளும், முன் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல்லில் முக்கிய சாலைகளான கோட்டை சாலை, பூங்கா சாலைகளில் நாளை மறுநாள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்ட சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் ஏ.டி.எஸ். மணிமாறன் தலைமையில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களை தவிர்க்க ஈடுபடவுள்ளனர். ட்ரோன் கேமரா மூலமும் கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்து ஒரு மாதம் நிறைவானதை, கொண்டாடிய சுஷ்மிதா சென் பாலிவுட்
    தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை பள்ளி மாணவர்கள்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா

    தமிழ்நாடு

    இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்: 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' பொம்மனும், குட்டி யானை ரகுவும் வைரலான ட்வீட்
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023