NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்-முன் ஏற்பாடுகள் தீவிரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்-முன் ஏற்பாடுகள் தீவிரம்
    18 அடி உயர நாமக்கல் ஆஞ்சநேயர்

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்-முன் ஏற்பாடுகள் தீவிரம்

    எழுதியவர் Nivetha P
    Dec 21, 2022
    08:07 pm

    செய்தி முன்னோட்டம்

    நாமக்கல் கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் செதுக்கப்பட்டு 18 அடி உயரத்தில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார்.

    இங்கு வருடா வருடம் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி மிக கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த வருடம் வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது.

    இந்த விழாவில் நாமக்கல்லில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இதனையொட்டி, அன்று காலை 5 மணியளவில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை சாத்தப்படவுள்ளது.

    ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு

    பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபாடு

    இதற்காக வடை தயாரிக்கும் பணியானது கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் துவங்கப்பட்டு 4வது நாளான இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இப்பணியில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியை சேர்ந்த ரமேஷ் தலைமையில் 32 பேர் கொண்ட ஈடுபட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும், தரிசன வசதி, பக்தர்கள் பாதுகாப்பு போன்ற பணிகளும், முன் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    இந்நிலையில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல்லில் முக்கிய சாலைகளான கோட்டை சாலை, பூங்கா சாலைகளில் நாளை மறுநாள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 500க்கும் மேற்பட்ட சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் ஏ.டி.எஸ். மணிமாறன் தலைமையில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களை தவிர்க்க ஈடுபடவுள்ளனர்.

    ட்ரோன் கேமரா மூலமும் கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல் பொருளாதாரம்
    நிச்சயமற்ற நிலையில் எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம்; உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் வெளியிட்ட தகவல் எம்எஸ் தோனி
    ராஜினாமாவெல்லாம் கிடையாது; பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டம் பங்களாதேஷ்
    மே மாத இறுதிவரை நின்ஜா ZX-4R பைக்கிற்கு க்கு ரூ.40,000 தள்ளுபடியை அறிவித்தது கவாஸாகி கவாஸாகி

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025