NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி
    பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-அமைச்சர் கிஷன் ரெட்டி

    பேரிடருக்கு பின் இந்தியாவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நான்கு மடங்கு அதிகரிப்பு-கிஷன் ரெட்டி

    எழுதியவர் Nivetha P
    Feb 08, 2023
    07:44 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜி 20 மாநாட்டின் ஒரு பகுதியாக குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச்சில் உள்ள டென்ட் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி உரையாற்றினார்.

    அப்போது அவர் இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு பின்னர் வெளிநாட்டினர் வருகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறினார்.

    இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், சுற்றுலாத்துறையை மிஷன் முறையில் டிஜிட்டல் மயமாக்க உறுதி செய்வதற்கான தேசிய சுற்றுலா திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில் உலக நாடுகள் மிக கடினமான காலங்களை எதிர்கொண்டது.

    முக்கியமாக சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

    சுற்றுலாத்துறை அமைச்சர்

    சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என பெருமிதம்

    மேலும் அவர் பேசுகையில், கொரோனா பரவல் காலமான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

    கடந்தாண்டு 2022ல் மட்டும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு 6.9 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதன்படி, இந்தியாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு சுற்றுலாத்துறையில் நெகிழ்ச்சியான வளர்ச்சியை அடைவதற்கான எங்கள் முயற்சிகள் சரியான திசையில் முன்னேறி வருகிறது என்பதற்கு சான்றாக உள்ளது என்று அவர் பெருமிதத்தோடு பேசியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    இந்தியா

    ஆசியாவின் மிக பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி நரேந்திர மோடி
    உலகின் முதல் நாசல் கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கோவிட் தடுப்பூசி
    இந்திய பெண் பயணியை அவமதித்த அமெரிக்க விமான நிறுவனம்-உதவ மறுத்த விமான ஊழியர்கள் அமெரிக்கா
    KTM 390 Adventure 2023 வெளியீடு! புதிய அம்சங்கள் என்னென்ன? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025