NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன?
    இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்படும்

    திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன?

    எழுதியவர் Sindhuja SM
    Oct 23, 2023
    12:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் பாரம்பரிய ஆராட்டு ஊர்வலம் இன்று நடைபெற இருப்பதால், திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் ஐந்து மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று TIAL தெரிவித்துள்ளது.

    பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள இந்த ஆராட்டு ஊர்வலம், திருவாங்கூர் அரசர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் அல்பசி ஆராட்டு ஊர்வலத்தை எளிதாக்கும் வகையில், இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்படும் என திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய லிமிடெட்(TIAL) தெரிவித்துள்ளது.

    இந்த விழாவையொட்டி நான்கு விமானங்களின் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.

    ட்ஜ்கந்ல்வா

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கபட்ட பாரமப்பரியம் 

    ஆராட்டு ஊர்வலம் கோவிலுக்கு திரும்பியதும், விமானங்கள் ஓடும் தார்ச்சாலை சுத்தம் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு அதன் பின்னரே விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும்.

    இந்த ஊர்வலம் விமான ஓடுபாதை வழியாக செல்ல, பல தசாப்தங்களாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை விமான சேவைகளை இடைநிறுத்தி வருகிறது திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்.

    சுவாமி சிலைகளை புனித நீராடுவதற்காக சங்குமுகம் கடற்கரைக்கு எடுத்து செல்லும் இந்த கோயில் ஊர்வலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கபட்டதாகும்.

    எனவே, 1932இல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் நிறுவப்பட்ட பின்னரும் இந்த பாரம்பரியமான ஊர்வலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமான சேவைகள்
    விமானம்
    கேரளா

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    விமான சேவைகள்

    3 நாட்கள் விமான சேவையை ரத்து செய்த கோ பர்ஸ்ட் - காரணம் என்ன?  விமானம்
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு  இந்தியா
    மே 15 வரை 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது இந்தியா
    ஏர் இந்தியா ஆட்சேர்ப்பு - 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் குவிந்துள்ளதாக மகிழ்ச்சி!  ஏர் இந்தியா

    விமானம்

    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    டிக்கெட் விலையை நிர்ணயிக்க ChatGPT-யை பயன்படுத்தும் ஏர் இந்தியா! ஏர் இந்தியா
    விமான பிரீமியம் எகானமி - வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா அசத்தல் அறிவிப்பு! ஏர் இந்தியா
    இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி டெல்லி

    கேரளா

    ஆண்களை விட சிறப்பாக கார் ஓட்டும் பெண்கள்: ஆய்வில் தகவல்  இந்தியா
    நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: 3 தென் மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்' கர்நாடகா
    துப்புரவு பெண் தொழிலாளர்கள் வாங்கிய ரூ.250 லாட்டரி சீட்டுக்கு, ரூ.10 கோடி பரிசு!  தமிழ்நாடு
    கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை - பகீர் சம்பவம்  கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025