NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து
    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து
    இந்தியா

    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து

    எழுதியவர் Sindhuja SM
    April 07, 2023 | 04:11 pm 1 நிமிட வாசிப்பு
    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து
    பைசாகி என்பது 'தை பொங்கல்' போல சீக்கியர்கள் கொண்டாடும் ஒரு தினமாகும்.

    அம்ரித்பால் சிங் பிரச்சனை காரணமாக பஞ்சாப் காவல்துறையினரின் விடுமுறை ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. பைசாகி அன்று காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்ற காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்ரித்பால், பைசாகி அன்று சீக்கியர்களின் கூட்டமான சர்பத் கல்சாவை நடத்துமாறு அகல் தக்த்திடம்(உயர் சீக்கிய மத அமைப்பு) கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பைசாகி என்பது 'தை பொங்கல்' போல சீக்கியர்கள் கொண்டாடும் ஒரு தினமாகும். இது இந்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தன்று சீக்கியர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அம்ரித்பால், அகல் தக்த்திடம் ஒரு வீடியோ மூலம் வலியுறுத்தி இருந்தார்.

    இதுவரை வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே நடத்தப்பட்ட சர்பத் கல்சா

    ஆனால், உயர் குருத்வாரா அமைப்பான ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி(SGPC), சர்பத் கல்சாவை நடத்துவதா என்பதை அகல் தக்த் மட்டுமே முடிவு செய்யமுடியும் என்று கூறியுள்ளது. சர்பத் கல்சா என்பது சீக்கிய சமூகத்தின் நீண்டகால எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சபையாகும். 1986 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மட்டுமே இதற்கு முன் சர்பத் கல்சா நடத்தப்பட்டது. உலகெங்கிலும் உள்ள சீக்கியக் குழுக்கள் ஒரு நடைமுறையைப் பின்பற்றுவதால், இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க சில மாதங்கள் தேவைப்படும். பஞ்சாப் போலீஸார், அம்ரித்பாலை பிடிக்க மார்ச் 18ஆம் தேதி முதல் முயற்சித்து வருகின்றனர். அம்ரித்பால் பாகிஸ்தான் ஏஜென்டாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்(NSA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    பஞ்சாப்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    அம்ரித்பால் சிங்

    இந்தியா

    நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல் பாஜக
    கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர் கொரோனா
    முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார் ஆந்திரா
    இந்தியாவில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 14 உயிரிழப்புகள் கொரோனா

    பஞ்சாப்

    மேல தாளம் முழங்க, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை வரவேற்க தயாராகும் தொண்டர்கள் இந்தியா
    காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் இந்தியா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல் பஞ்சாப்
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா

    அம்ரித்பால் சிங்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ்  இந்தியா
    'தி பாய்ஸ்': வைரல் ஆடியோ மூலம் அம்ரித்பாலுக்கு எச்சரிக்கை விடுத்த பஞ்சாப் போலீஸ்  இந்தியா
    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023