NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து
    பைசாகி என்பது 'தை பொங்கல்' போல சீக்கியர்கள் கொண்டாடும் ஒரு தினமாகும்.

    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து

    எழுதியவர் Sindhuja SM
    Apr 07, 2023
    04:11 pm

    செய்தி முன்னோட்டம்

    அம்ரித்பால் சிங் பிரச்சனை காரணமாக பஞ்சாப் காவல்துறையினரின் விடுமுறை ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பைசாகி அன்று காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்ற காரணத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அம்ரித்பால், பைசாகி அன்று சீக்கியர்களின் கூட்டமான சர்பத் கல்சாவை நடத்துமாறு அகல் தக்த்திடம்(உயர் சீக்கிய மத அமைப்பு) கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    பைசாகி என்பது 'தை பொங்கல்' போல சீக்கியர்கள் கொண்டாடும் ஒரு தினமாகும். இது இந்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

    இந்த தினத்தன்று சீக்கியர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று அம்ரித்பால், அகல் தக்த்திடம் ஒரு வீடியோ மூலம் வலியுறுத்தி இருந்தார்.

    இந்தியா

    இதுவரை வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே நடத்தப்பட்ட சர்பத் கல்சா

    ஆனால், உயர் குருத்வாரா அமைப்பான ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி(SGPC), சர்பத் கல்சாவை நடத்துவதா என்பதை அகல் தக்த் மட்டுமே முடிவு செய்யமுடியும் என்று கூறியுள்ளது.

    சர்பத் கல்சா என்பது சீக்கிய சமூகத்தின் நீண்டகால எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சபையாகும்.

    1986 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மட்டுமே இதற்கு முன் சர்பத் கல்சா நடத்தப்பட்டது.

    உலகெங்கிலும் உள்ள சீக்கியக் குழுக்கள் ஒரு நடைமுறையைப் பின்பற்றுவதால், இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க சில மாதங்கள் தேவைப்படும்.

    பஞ்சாப் போலீஸார், அம்ரித்பாலை பிடிக்க மார்ச் 18ஆம் தேதி முதல் முயற்சித்து வருகின்றனர்.

    அம்ரித்பால் பாகிஸ்தான் ஏஜென்டாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்(NSA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பஞ்சாப்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    அம்ரித்பால் சிங்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி கொரோனா
    இந்தியாவில் உள்ள புனிதமான, யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா! சுற்றுலா
    மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு டெல்லி
    இந்தியாவில் ஒரே நாளில் 3,038 பேருக்கு கொரோனா: 9 பேர் உயிரிழப்பு கொரோனா

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை இந்தியா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா

    அம்ரித்பால் சிங்

    பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல் பஞ்சாப்
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025