NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது 
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது

    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது 

    எழுதியவர் Nivetha P
    May 17, 2023
    11:22 am

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள வம்பாமேடு பகுதியினை சேர்ந்தவர் அமரன்(25), இவர் கள்ளச்சாராய வியாபாரம் செய்து வந்துள்ளார்.

    கடந்த 13ம் தேதி எக்கியர்குப்பம் மீனவர் பகுதியினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளார்கள்.

    அந்த சாராயத்தினை குடித்த சில மணி நேரங்களிலேயே வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் போன்றவைகள் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    நேற்றைய நிலவரப்படி 14பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.

    இதனை தொடர்ந்து முண்டியம்பாக்கம் மற்றும் மரக்காணம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் 52 பேர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

    கைது 

    8 பேரின் வாக்குமூலம்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது 

    இந்நிலையில் நேற்று(மே.,16) இரவு இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கெமிக்கல் பேக்டரி உரிமையாளரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.

    சென்னை வானகரம் மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள விநாயகா எண்டர்ப்ரைசஸ் என்னும் கெமிக்கல் பேக்டரியினை மதுரவாயல் பகுதியினை சேர்ந்த இளையநம்பி என்பவர் நடத்தி வந்துள்ளார்.

    இவரை கைது செய்ய ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் மிக துரிதமாக செயல்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக இந்த வழக்கில் கைதான 8 பேரும் இளையநம்பியிடமிருந்து 600 லிட்டர் மெத்தனால் வாங்கியதாக காவல்துறையின் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார்கள்.

    அதன் அடிப்படையிலேயே காவல்துறையினர் இவரை கைது செய்து காஞ்சிபுரம் அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரசு மருத்துவமனை
    விழுப்புரம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  காவல்துறை
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் தமிழ்நாடு
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு

    காவல்துறை

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி இந்தியா
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை
    மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண் பலாத்கார கொலை வழக்கு - 144 தடையினை மீறி காவல்நிலையத்தில் தீ வைப்பு  மேற்கு வங்காளம்
    சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்  இந்தியா

    காவல்துறை

    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது  சென்னை
    கேரளா மாநிலத்தில் பெண் எஸ்.ஐ.அதிரடி கைது  கேரளா
    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இந்தியா
    சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025