Page Loader
ஈரோடு இடைத்தேர்தல் - 19ம் தேதி முதல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரச்சாரம்
ஈரோடு இடைத்தேர்தல் - 19ம் தேதி முதல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரச்சாரம்

ஈரோடு இடைத்தேர்தல் - 19ம் தேதி முதல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரச்சாரம்

எழுதியவர் Nivetha P
Feb 11, 2023
08:08 pm

செய்தி முன்னோட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31ம் தேதி துவங்கியது. இதில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். பல குழப்பங்களுக்கு மத்தியில் இறுதியாக அதிமுக கட்சி சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் களமிறங்குகிறார்கள். இதனை தொடர்ந்து பிரச்சாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து வரும் 24ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை துவங்கவுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி 5 நாட்கள் பிரச்சாரம் நடத்தவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கன்கள் பறிமுதல்

3 நாட்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார் கமல்ஹாசன்

இந்நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஈரோடு இடைத்தேர்தல் தொகுதியில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் 3 நாட்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட போவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 19, 20 மற்றும் 21 தேதிகளில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடவேண்டியவை. இதற்கிடையே, இடைத்தேர்தல் நடக்கும் பகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது. அங்கு சென்று சோதனை செய்ததில் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் சார்புதீன் காரில் பணம் பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.