NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம்
    இந்தியா

    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம்

    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம்
    எழுதியவர் Nivetha P
    Dec 30, 2022, 10:43 am 1 நிமிட வாசிப்பு
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம்
    'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்'-தேர்தல் ஆணையம் புது முயற்சி

    மாநிலங்களின் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் பொழுது, சொந்த மாநிலம் விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வருபவர்கள் வாக்களிக்க தங்கள் சொந்த மாநிலத்திற்கு கூட்டம் கூட்டமாக செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. இக்காரணத்தினால் சிலர் வாக்களிப்பதை தவிர்த்தும் விடுகிறார்கள். இதனை மாற்றும் வகையில், பணி செய்யும் மாநிலங்களில் இருந்தபடியே, தங்களது சொந்த ஊர் வாக்காளர் அட்டை கொண்டு வாக்களிக்க வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இதில் ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்றனர். இதனையடுத்து 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்

    இந்த இயந்திரம் மூலம் ஒரே வாக்குச்சாவடியில் இருந்து அதிகபட்சம் 72 தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்கினை பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வரும் ஜனவரி 16ம் தேதி அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து, அதற்கான அழைப்பையும் விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் இந்த 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' குறித்த செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் அரசியல் கட்சிகள் ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    தேர்தல்

    சமீபத்திய

    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்

    இந்தியா

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : தங்கம் வென்றார் நிது கங்காஸ் உலக கோப்பை
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்
    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... வங்கிக் கணக்கு

    தேர்தல்

    நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு இந்தியா
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் ஈரோடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023