NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம்
    'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்'-தேர்தல் ஆணையம் புது முயற்சி

    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம்

    எழுதியவர் Nivetha P
    Dec 30, 2022
    10:43 am

    செய்தி முன்னோட்டம்

    மாநிலங்களின் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் பொழுது, சொந்த மாநிலம் விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று வேலை செய்து வருபவர்கள் வாக்களிக்க தங்கள் சொந்த மாநிலத்திற்கு கூட்டம் கூட்டமாக செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.

    இக்காரணத்தினால் சிலர் வாக்களிப்பதை தவிர்த்தும் விடுகிறார்கள்.

    இதனை மாற்றும் வகையில், பணி செய்யும் மாநிலங்களில் இருந்தபடியே, தங்களது சொந்த ஊர் வாக்காளர் அட்டை கொண்டு வாக்களிக்க வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.

    இதில் ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்றனர். இதனையடுத்து 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    ஜனவரி 31ம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய உத்தரவு

    அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்

    இந்த இயந்திரம் மூலம் ஒரே வாக்குச்சாவடியில் இருந்து அதிகபட்சம் 72 தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்கினை பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து வரும் ஜனவரி 16ம் தேதி அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து, அதற்கான அழைப்பையும் விடுத்துள்ளது.

    இந்த கூட்டத்தில் இந்த 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' குறித்த செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், இது குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் அரசியல் கட்சிகள் ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    இந்தியா

    சமீபத்திய

    ராணுவ நடவடிக்கைகளை லைவ் கவரேஜ் செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுரை இந்திய ராணுவம்
    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்

    இந்தியா

    பெரியாரின் பெண்ணியம்! நினைவு கொள்வோம் பெரியாரை! தமிழ்நாடு
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்
    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்திய ராணுவம்
    இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025