LOADING...
டெல்லி குண்டுவெடிப்பு சதிக்கு நிதியுதவி: அல்-ஃபலா பல்கலைக்கழகம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
அல்-ஃபலா பல்கலைக்கழகம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி குண்டுவெடிப்பு சதிக்கு நிதியுதவி: அல்-ஃபலா பல்கலைக்கழகம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2025
09:54 am

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு மற்றும் ஃபரிதாபாத் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய நிதியுதவி குறித்து, அல்-ஃபலா பல்கலைக்கழகம்(Al-Falah University) மீதான நிதி மோசடி விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் பல இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்(PMLA) கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனைகளின் முக்கிய நோக்கம், பயங்கரவாதச் சதித் திட்டங்களுக்கு நிதி திரட்டுதல் மற்றும் பண மோசடி நடவடிக்கைகளில் அல்-ஃபலா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் தொடர்பு மற்றும் பங்கு குறித்துத் தகவல்களைச் சேகரிப்பதாகும். டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு மற்றும் ஃபரிதாபாத் பயங்கரவாத குழுவின் உறுப்பினர்களின் நிதி ஆதாரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

பறிமுதல்

பறிமுதல் மற்றும் அடுத்த கட்டம்

சோதனையின்போது, நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் வங்கியின் பரிமாற்றப் பதிவுகள் ஆகியவை அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளின் மூலங்கள் குறித்து ஆழமான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ள நிதிப் பிணைப்புகளை துண்டிக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை

ஆரம்பகட்ட விசாரணையில் வெளியான தகவல்கள்

அல்-ஃபலா குழுமத்துடன் இணைக்கப்பட்ட ஒன்பது போலி நிறுவனங்கள், ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆரம்பகால கண்டுபிடிப்புகள், ஷெல்-நிறுவன நடத்தையுடன் ஒத்துப்போகும் பல ஆபத்து குறிகாட்டிகளை சுட்டிக்காட்டுகின்றன, அவற்றில்: பதிவு செய்யப்பட்ட வணிக இடங்களில் ஆட்களோ/ அர்த்தமுள்ள செயல்பாடு நடந்ததற்கான அறிகுறி இல்லை. பல்வேறு நிறுவனங்கள் ஒரே மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் பயன்படுத்தியது அம்பலம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு/ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழக தாக்கல்கள் இல்லை எனினும் அறிக்கையிடப்பட்ட செயல்பாடுகளில் முரண். இயக்குநர்கள்/கையொப்பமிட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் முழுவதும் பலவீனமான KYC தடங்கள். வங்கி வழிகள் மூலம் குறைந்தபட்ச சம்பள விநியோகம் மற்றும் மனிதவள பதிவுகள் இல்லாமை. கூடுதலாக, பல்கலைக்கழகத்தின் UGC மற்றும் NAAC அங்கீகாரம் தொடர்பான முரண்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.