NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல்
    இந்தியா

    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல்

    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல்
    எழுதியவர் Nivetha P
    Jan 03, 2023, 04:14 pm 0 நிமிட வாசிப்பு
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல்
    விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் மற்றும் விபத்து ஏற்படுத்திய கார்

    தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் சக்கரத்தில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் விவகாரமாக உருவெடுத்தது. இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசார் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டு தற்போது சில தகவல்களை தெரிவித்துள்ளார்கள். சம்பவம் நடந்த அன்று, டெல்லி போலீசாருக்கு அதிகாலை வந்த முதல் அழைப்பை வைத்து பெண்ணை இழுத்துச்செல்லும் காரை தேடி வந்தனர். அதன்பின்னர், வந்த அழைப்பில் இளம்பெண் சடலமாக இருப்பதாக கூறியதையடுத்து, உடலை கைப்பற்றினர். மேலும் காரை பறிமுதல் செய்து அதிலிருந்த 5 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

    பலியான பெண்ணுடன் இன்னொரு பெண்ணும் பயணம் செய்துள்ளதாக போலீசார் தகவல்

    இந்நிலையில், அந்த காரை தீபக் கண்ணா என்பவர் டிசம்பர் 31ம் தேதி இரவல் வாங்கி, தனது 4 நண்பர்களை அதில் ஏற்றிக்கொண்டு ஹரியானா சென்றுள்ளார். அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியான இளம்பெண் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கவில்லை என்னும் புது தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, விபத்தில் பலியான அஞ்சலியுடன் இன்னொரு பெண்ணும் பயணம் செய்துள்ளார், அவருக்கும் விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் சுதாரித்து கொண்ட அப்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார், ஆனால் அஞ்சலியின் கால் கார் சக்கரத்தில் சிக்கியதால் அவரால் தப்பிக்க முடியாமல், இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்த பல சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், இது தெரியவந்தது என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    காவல்துறை

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    இந்தியா

    UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம் தொழில்நுட்பம்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் மத்திய பிரதேசம்
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு நாடாளுமன்றம்

    காவல்துறை

    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை கோவை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023