NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தனியார் ஐஏஎஸ் மையத்தில் 3 மாணவர்கள் இறந்ததையடுத்து, 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்தது டெல்லி மாநகராட்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனியார் ஐஏஎஸ் மையத்தில் 3 மாணவர்கள் இறந்ததையடுத்து, 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்தது டெல்லி மாநகராட்சி
    சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 சிவில் சர்வீசஸ் நிறுவனங்களின் அடித்தளங்களுக்கு சீல்

    தனியார் ஐஏஎஸ் மையத்தில் 3 மாணவர்கள் இறந்ததையடுத்து, 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்தது டெல்லி மாநகராட்சி

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 29, 2024
    10:08 am

    செய்தி முன்னோட்டம்

    தனியார் IAS பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளத்தில் சிக்கி மூன்று மாணவர்கள் இறந்ததையடுத்து, டெல்லி மாநகராட்சி, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 சிவில் சர்வீசஸ் நிறுவனங்களின் அடித்தளங்களுக்கு சீல் வைத்துள்ளது.

    உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரளாவைச் சேர்ந்த நவீன் டால்வின் ஆகியோர், சனிக்கிழமை மாலை பெய்த கனமழையால் ராவ்வின் ஐஏஎஸ் படிப்பு வட்டத்தின் அடித்தளத்தில் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

    முன்னதாக வெள்ளத்தில் மாணவர்கள் இறந்ததையடுத்து, இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாணவர்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில், டெல்லி மாநகராட்சி சட்டவிரோத பயிற்சி மையங்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது மற்றும் வெள்ளம் சம்பவத்தை விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளது.

    சட்ட நடவடிக்கை

    உரிமையாளர், ஒருங்கிணைப்பாளர் கைது

    இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, ராவின் ஐஏஎஸ் படிப்பு வட்டத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

    அவர்கள் மீது பாரதீய நியாய சன்ஹிதா(பிஎன்எஸ்) பிரிவு 105 மற்றும் 290 இன் கீழ் மற்ற குற்றச்சாட்டுகளுடன் குற்றமற்ற கொலைக்காக பதிவு செய்யப்பட்டது.

    பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வடிகால் அமைப்பு இல்லாததால் வெள்ளம் ஏற்பட்டதாக குப்தா ஒப்புக்கொண்டதாக எஃப்.ஐ.ஆர் தெரிவிக்கிறது.

    விசாரணையில், 2021 ஆம் ஆண்டில் ராவ்வின் ஐஏஎஸ் படிப்பு வட்டம் அதன் கட்டிடத் திட்டத்திற்கு, அடித்தளத்தை வாகன நிறுத்தம் மற்றும் சேமிப்பிற்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்ததை எம்சிடி உறுதிப்படுத்தியது. தற்போது அங்கே சட்டவிரோதமாக நூலகம் இயங்குகிறது என்பதை கண்டறிந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி

    சமீபத்திய

    ஆர்த்தி - ரவி விவாகரத்து வழக்கில் அடுத்த ட்விஸ்ட்; கெனிஷா நீதிமன்றத்திற்கு வர தயாராக இருப்பதாக பதிவு ஜெயம் ரவி
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பஞ்சாப் கிங்ஸ் அணியின் இயக்குநர்கள் மீது ப்ரீத்தி ஜிந்தா வழக்கு; காரணம் என்ன? பஞ்சாப் கிங்ஸ்
    வடகிழக்கு மாநிலங்களில் அதிகளவு முதலீடு செய்யபோவதாக அம்பானி, அதானி அறிவிப்பு ரிலையன்ஸ்

    டெல்லி

    காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி  ஆம் ஆத்மி
    கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு 2-3 நாட்கள் வரை இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால்
    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்
    ஜாமீன் தடையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025