Page Loader
தனியார் ஐஏஎஸ் மையத்தில் 3 மாணவர்கள் இறந்ததையடுத்து, 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்தது டெல்லி மாநகராட்சி
சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 சிவில் சர்வீசஸ் நிறுவனங்களின் அடித்தளங்களுக்கு சீல்

தனியார் ஐஏஎஸ் மையத்தில் 3 மாணவர்கள் இறந்ததையடுத்து, 13 பயிற்சி மையங்களுக்கு சீல் வைத்தது டெல்லி மாநகராட்சி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2024
10:08 am

செய்தி முன்னோட்டம்

தனியார் IAS பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ளத்தில் சிக்கி மூன்று மாணவர்கள் இறந்ததையடுத்து, டெல்லி மாநகராட்சி, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 13 சிவில் சர்வீசஸ் நிறுவனங்களின் அடித்தளங்களுக்கு சீல் வைத்துள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா யாதவ், தெலுங்கானாவைச் சேர்ந்த தன்யா சோனி மற்றும் கேரளாவைச் சேர்ந்த நவீன் டால்வின் ஆகியோர், சனிக்கிழமை மாலை பெய்த கனமழையால் ராவ்வின் ஐஏஎஸ் படிப்பு வட்டத்தின் அடித்தளத்தில் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். முன்னதாக வெள்ளத்தில் மாணவர்கள் இறந்ததையடுத்து, இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாணவர்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், டெல்லி மாநகராட்சி சட்டவிரோத பயிற்சி மையங்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது மற்றும் வெள்ளம் சம்பவத்தை விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை

உரிமையாளர், ஒருங்கிணைப்பாளர் கைது

இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, ராவின் ஐஏஎஸ் படிப்பு வட்டத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது பாரதீய நியாய சன்ஹிதா(பிஎன்எஸ்) பிரிவு 105 மற்றும் 290 இன் கீழ் மற்ற குற்றச்சாட்டுகளுடன் குற்றமற்ற கொலைக்காக பதிவு செய்யப்பட்டது. பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வடிகால் அமைப்பு இல்லாததால் வெள்ளம் ஏற்பட்டதாக குப்தா ஒப்புக்கொண்டதாக எஃப்.ஐ.ஆர் தெரிவிக்கிறது. விசாரணையில், 2021 ஆம் ஆண்டில் ராவ்வின் ஐஏஎஸ் படிப்பு வட்டம் அதன் கட்டிடத் திட்டத்திற்கு, அடித்தளத்தை வாகன நிறுத்தம் மற்றும் சேமிப்பிற்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்ததை எம்சிடி உறுதிப்படுத்தியது. தற்போது அங்கே சட்டவிரோதமாக நூலகம் இயங்குகிறது என்பதை கண்டறிந்துள்ளது.