NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குற்றவியல் சட்ட மசோதா: மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 4 மசோதாக்கள் நிறைவேற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குற்றவியல் சட்ட மசோதா: மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 4 மசோதாக்கள் நிறைவேற்றம்
    மக்களவையில் மசோதாக்களை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

    குற்றவியல் சட்ட மசோதா: மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் 4 மசோதாக்கள் நிறைவேற்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 21, 2023
    08:40 am

    செய்தி முன்னோட்டம்

    காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள் இன்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மூன்று மசோதாக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார்.

    மறுவடிவமைக்கப்பட்ட மசோதாக்களின் பெயர்கள் -- பாரதிய நியாய (இரண்டாம்) சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா (இரண்டாம்) சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா (இரண்டாம்) மசோதா.

    இவற்றோடு, தொலைத்தொடர்பு மசோதா, 2023, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

    மக்களவையில் தவறான நடத்தை மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட 97 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இல்லாத நிலையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    card 2

    மசோதாக்களை அவையில் தாக்கல் செய்த அமித் ஷா

    இந்த மூன்று மசோதாக்களும் முறையே இந்திய தண்டனைச் சட்டம்-1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1898 மற்றும் 1872ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றும்.

    நிபுணர்களின் ஆலோசனைக்குப் பிறகு மசோதாக்கள் உருவாக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

    இந்த மூன்று மசோதாக்களும் இந்திய சிந்தனையின் அடிப்படையில் நீதி அமைப்பை நிறுவும் என்றார்.

    தற்போதுள்ள சட்டங்கள் ஒரு குற்றத்திற்கு தண்டனை அளிக்கும் ஆனால் நீதியை வழங்காத காலனித்துவ மனநிலையை பிரதிபலிக்கின்றன என்றார்.

    மசோதாக்களால் கொண்டு வரப்பட்ட மாற்றங்களைப் பற்றி விரிவாகக் கூறிய ஷா, குற்றவியல் நீதி அமைப்பில் ஆஜராகாமல் இருப்பதற்கான ஒரு விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    card 3

    "நீதிமன்றத்தில் ஆஜராகாமல் விசாரணை நடத்தலாம்" 

    "அப்சென்ஷியாவில் விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... மும்பை குண்டுவெடிப்பாக இருந்தாலும் சரி, வேறு எந்த விஷயமாக இருந்தாலும் சரி, நாட்டில் உள்ள பல வழக்குகள் நம்மை உலுக்கியது".

    "அந்த நபர்கள் வேறு நாடுகளில் பதுங்கி இருக்கிறார்கள், அதனால் விசாரணைகள் நடக்கவில்லை. இப்போது அவர்கள் வரத் தேவையில்லை. அவர்கள் 90 நாட்களுக்குள் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றால், அவர்கள் இல்லாத நிலையில் விசாரணை தொடரும்... அவர்கள் மீது வழக்குத் தொடர அரசு வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்படுவார், அவர்களுக்கு தூக்கு தண்டனை கொண்டு வரக்கூட நடவடிக்கை எடுக்கப்படும்".

    "அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்போது அவர்களுக்கு அடைக்கலம் தந்த மற்ற நாடுகளும், அவர்களின் நிலையை மாற்றிக் கொள்வதால் அவர்கள் விரைவாகத் திரும்பி வருவார்கள்" என்று அவர் மக்களவையில் கூறினார்.

    card 4

    மனுதாக்கல் செய்ய அவகாசம் மாற்றம் 

    "இப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிப்பதற்காக மனு தாக்கல் செய்ய, ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்படும்... நீதிபதி அந்த ஏழு நாட்களில் விசாரணையை நடத்த வேண்டும், அதிகபட்சமாக 120 நாட்களில் வழக்கு விசாரணைக்கு வரும்."

    "முன்னதாக மனு பேரம் பேசுவதற்கு நேர வரம்பு இல்லை. இப்போது குற்றம் நடந்த 30 நாட்களுக்குள் ஒருவர் தங்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டால் தண்டனை குறைவாக இருக்கும்..."

    "விசாரணையின் போது ஆவணங்களை சமர்ப்பிக்க எந்த ஏற்பாடும் இல்லை. அனைத்து ஆவணங்களையும் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்தியுள்ளோம். அதில் எந்த தாமதமும் செய்யப்படாது" என்று ஷா மேலும் கூறினார்.

    சிஆர்பிசியில் 484 பிரிவுகள் இருப்பதாக ஷா கூறினார். இந்த பில்களுடன், இப்போது 531 இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை
    அமித்ஷா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மக்களவை

    நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: இன்று என்ன விவாதிக்கப்பட்டது? மணிப்பூர்
    அமித்ஷா Vs ராகுல் காந்தி: இன்று சூடுபிடிக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி பாஜக எம்பிக்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததால் சர்ச்சை  நாடாளுமன்றம்
    "மக்களுக்கு பிரதமர் மீது அவநம்பிக்கை இல்லை": மக்களவையில் அமித் ஷா அமித்ஷா

    அமித்ஷா

    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  மல்யுத்த வீரர்கள்
    காஷ்மீரில் கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் - அமித்ஷா திறந்து வைத்தார்  ஜம்மு காஷ்மீர்
    தமிழகத்தில் இருந்து 25 NDA தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்: அமித்ஷா  2024 மக்களவை தேர்தல்
    தமிழர் பிரதமரானால் மகிழ்ச்சி, தமிழிசைக்கு வாய்ப்பு கொடுக்கலாம் - மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025