NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    இந்தியா

    குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022, 09:32 pm 0 நிமிட வாசிப்பு
    குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    சிறுவர்களை பணியில் அமர்த்துவது பெரும் குற்றம்

    சென்னை சாலிகிராமம், கோயம்பேடு போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தொழிலாளர் உதவி ஆய்வாளர், ஆபரேஷன் ஸ்மைலி குழு மற்றும் தன்னார்வ குழு இணைந்து புகார் அளிக்கப்பட்ட இடத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வினை மேற்கொண்டனர். இது குறித்து, தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் ஓர் செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளார். "ஆய்வு குழுவினர் புகார் அளிக்கப்பட்ட இடத்திற்க்கு சென்று ஆய்வு செய்ததில் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு குழந்தை நல குழுவினரிடம் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வேலை அளித்தவர்வர்கள் மீது தொழிலாளர் உதவி ஆய்வாளர் து.நீ.பாலாஜி அவர்கள் சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்" என்று கூறியுள்ளார்.

    சிறுவர்களை பணியமர்த்தினால் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை

    "14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை பணியில் அமர்த்துவது பெரும் குற்றம் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை பணியில் அமர்த்திய 3 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். சட்டத்தை மீறி சிறுவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும், நீதிமன்றம் மூலம் அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிரைத்தண்டனை, அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்றும் அந்த செய்தி குறிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    தமிழ்நாடு

    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு இந்தியா
    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு மாவட்ட செய்திகள்
    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம் இந்தியா
    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா இந்தியா

    சென்னை

    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் காவல்துறை
    தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்வு - இன்றைய விலை விபரம் தங்கம் வெள்ளி விலை
    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம் தமிழ்நாடு
    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023