NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை
    சிறுவர்களை பணியில் அமர்த்துவது பெரும் குற்றம்

    குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022
    09:32 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை சாலிகிராமம், கோயம்பேடு போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, தொழிலாளர் உதவி ஆய்வாளர், ஆபரேஷன் ஸ்மைலி குழு மற்றும் தன்னார்வ குழு இணைந்து புகார் அளிக்கப்பட்ட இடத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வினை மேற்கொண்டனர்.

    இது குறித்து, தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் ஓர் செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளார்.

    "ஆய்வு குழுவினர் புகார் அளிக்கப்பட்ட இடத்திற்க்கு சென்று ஆய்வு செய்ததில் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு குழந்தை நல குழுவினரிடம் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வேலை அளித்தவர்வர்கள் மீது தொழிலாளர் உதவி ஆய்வாளர் து.நீ.பாலாஜி அவர்கள் சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்" என்று கூறியுள்ளார்.

    அபராதம் மற்றும் சிறைத்தண்டனை அளிக்கப்படும்

    சிறுவர்களை பணியமர்த்தினால் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை

    "14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை பணியில் அமர்த்துவது பெரும் குற்றம் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை பணியில் அமர்த்திய 3 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    சட்டத்தை மீறி சிறுவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

    மேலும், நீதிமன்றம் மூலம் அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிரைத்தண்டனை, அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்றும் அந்த செய்தி குறிப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை! இந்தியா
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    தமிழ்த் திரையுலகில் 20 வருடங்களாக ஆதிக்ககம் செலுத்தி வரும் த்ரிஷா த்ரிஷா
    1000 விளக்குகளால் உருவான ஸ்ரீரங்கம் கோயிலின் ராஜகோபுரம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025