NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்
    கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்

    கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்

    எழுதியவர் Nivetha P
    Mar 16, 2023
    11:54 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் 2வது அலையாக மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ளது.

    கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பது குறித்து பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    மீண்டும் அதிகரிக்கும் பொருட்டு, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதனையடுத்து இன்று(மார்ச்.,16) முதல் கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

    முன்னதாக நேற்று முன்தினம் பாதிப்பு அதிகமுள்ளதாக கூறப்பட்ட பகுதிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரோடு தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 462 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    கொரோனா தொற்றால் மரணம்

    கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தல்

    பரிசோதனை மேற்கொண்டதன் முடிவுகள் நேற்று(மார்ச்.,15) மாலை வெளியானது.

    அதன்படி தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கோவையில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

    இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,41,323ஆக அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது.

    தற்போதைய நிலவரப்படி கோவையில் கொரோனா பாதிப்போடு 68 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதே போல் நேற்றைய நிலவரப்படி சென்னையில் 57 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருச்சியில் கடந்த வாரம் ஒரு இளைஞர் கொரோனா தொற்றால் மரணமடைந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    கொரோனா

    சமீபத்திய

    இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது: அதற்கான காரணம் இதோ! தங்க விலை
    செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியமான உணவு
    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்
    'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல் ஆபரேஷன் சிந்தூர்

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! மாவட்ட செய்திகள்
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! இந்தியா
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025