NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்
    கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்

    எழுதியவர் Nivetha P
    Mar 16, 2023
    11:54 am
    கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்
    கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல்

    தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் 2வது அலையாக மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பது குறித்து பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீண்டும் அதிகரிக்கும் பொருட்டு, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து இன்று(மார்ச்.,16) முதல் கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். முன்னதாக நேற்று முன்தினம் பாதிப்பு அதிகமுள்ளதாக கூறப்பட்ட பகுதிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரோடு தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 462 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    2/2

    கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தல்

    பரிசோதனை மேற்கொண்டதன் முடிவுகள் நேற்று(மார்ச்.,15) மாலை வெளியானது. அதன்படி தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கோவையில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,41,323ஆக அதிகரித்துள்ளது என கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கோவையில் கொரோனா பாதிப்போடு 68 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதே போல் நேற்றைய நிலவரப்படி சென்னையில் 57 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் கடந்த வாரம் ஒரு இளைஞர் கொரோனா தொற்றால் மரணமடைந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோவை
    கொரோனா

    கோவை

    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது தமிழ்நாடு
    ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள் இந்தியா
    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி மாவட்ட செய்திகள்

    கொரோனா

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை தமிழ்நாடு
    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    கொரோனா போல் பரவி வரும் H3N2 காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்தியா
    கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி சென்னை உயர் நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023