NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள்
    நேரில் சென்று ஆதரவு தெரிவித்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள்

    எழுதியவர் Nivetha P
    Jan 05, 2023
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    கொரோனா கால நெருக்கடியில் எந்த விதிமுறைகளும் சரிவர மேற்கொள்ளாமல் 2300 தற்காலிக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.

    இவர்களது பணி காலம் கடந்த டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்து விட்டது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், ஆபத்து காலத்தில் உதவியவர்கள் என்பதாலும் அவர்களுக்கு சுகாதாரநிலையங்களிலும், 'வீடு தேடி மருத்துவம்' போன்ற திட்டங்களில் பணியளிக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்தது.

    ஆனால், தற்போது இந்த செவிலியர்கள், 'நாங்கள் இனி தற்காலிக பணியில் சேர மாட்டோம். அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்று கூறி போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அ.தி.மு.க., பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

    முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆதரவு

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஒப்பந்த செவிலியர்கள் ஈடுபாடு

    ஒப்பந்த செவிலியர்கள் முதலில் சேலத்தில் தங்களது போராட்டத்தை துவங்கினர். அங்கு போலீசார் அவர்களை கைது செய்து விடுவித்தது.

    நேற்று சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் மேற்கொண்ட இவர்கள்,

    இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவர்களது இப்போராட்டத்திற்கு அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்து, பணி நிரந்தரத்தை வலியுறுத்தி பேசினார்.

    இவர் அமைச்சராக இருந்தபொழுது தான் இவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    போராட்டம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? மெரினா
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு தமிழ்நாடு
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு தமிழ்நாடு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025