NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள்
    இந்தியா

    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள்

    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள்
    எழுதியவர் Nivetha P
    Jan 05, 2023, 06:24 pm 1 நிமிட வாசிப்பு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள்
    நேரில் சென்று ஆதரவு தெரிவித்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

    கொரோனா கால நெருக்கடியில் எந்த விதிமுறைகளும் சரிவர மேற்கொள்ளாமல் 2300 தற்காலிக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். இவர்களது பணி காலம் கடந்த டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்து விட்டது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், ஆபத்து காலத்தில் உதவியவர்கள் என்பதாலும் அவர்களுக்கு சுகாதாரநிலையங்களிலும், 'வீடு தேடி மருத்துவம்' போன்ற திட்டங்களில் பணியளிக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்தது. ஆனால், தற்போது இந்த செவிலியர்கள், 'நாங்கள் இனி தற்காலிக பணியில் சேர மாட்டோம். அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்று கூறி போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அ.தி.மு.க., பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஒப்பந்த செவிலியர்கள் ஈடுபாடு

    ஒப்பந்த செவிலியர்கள் முதலில் சேலத்தில் தங்களது போராட்டத்தை துவங்கினர். அங்கு போலீசார் அவர்களை கைது செய்து விடுவித்தது. நேற்று சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டம் மேற்கொண்ட இவர்கள், இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது இப்போராட்டத்திற்கு அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இன்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்து, பணி நிரந்தரத்தை வலியுறுத்தி பேசினார். இவர் அமைச்சராக இருந்தபொழுது தான் இவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை
    போராட்டம்

    சமீபத்திய

    அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் அதிமுக
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா
    கண் நோய்களை கண்டறியும் AI-ஆப்! அசத்திய 11 வயது கேரளா சிறுமி செயற்கை நுண்ணறிவு
    ஐபிஎல் : 2018 சீசனிலிருந்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கே.எல்.ராகுல் முதலிடம் ஐபிஎல்

    சென்னை

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மஞ்சப்பை திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட் 2023
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் தமிழ்நாடு
    சென்னைக்கான பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஸ்நாக்ஸ் திட்டம் பட்ஜெட் 2023

    போராட்டம்

    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் தமிழ்நாடு
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் விழுப்புரம்
    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது தமிழ்நாடு
    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023