NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை 
    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை 

    எழுதியவர் Nivetha P
    May 03, 2023
    01:37 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி இடையார்பாளையம் பகுதியினை சேர்ந்தவர் சுஜய்(28).

    இவருக்கும் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியினை சேர்ந்த ரேஷ்மா(25)என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்திற்கு பின்னர் இவர்கள் பொள்ளாச்சி கெளரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

    தற்போது ரேஷ்மா கர்ப்பமாக உள்ளதால் பிரசவத்திற்காக தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இதற்கிடையே நேற்று(மே.,2)இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இளம்பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

    அதனையடுத்து அப்பகுதி மக்கள் அங்குச்சென்று பார்க்கையில் சுஜய் வீட்டில் கல்லூரி மாணவி ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

    இதுகுறித்து காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டது.

    தகவல் கிடைத்ததன்பேரில், அவர்கள் அங்கு விரைந்துவந்து சடலத்தைமீட்டு பிரேதப்பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    கொலை

    தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைவு 

    பின்னர் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இறந்து கிடந்த கல்லூரி மாணவி சுப்புலட்சுமி(20) தகவல் தொழில்நுட்பம் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

    மேலும், திருமணத்திற்கு முன்னர் ஒரே பகுதியில் வசித்து வந்துள்ள சுஜய்க்கும் இந்த பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு இந்த மாணவி சுஜய் வீட்டிற்கு வந்துள்ளார். தன்னை காதலித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது ஏன் என இவர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம்.

    அந்த ஆத்திரத்தில் சுஜய் அப்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பித்திருக்கலாம் என்னும் கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனையடுத்து கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிய சுஜயினை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவிற்கு விரைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    கேரளா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    மின்சார கார் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது மத்திய அரசு மின்சார வாகனம்
    மணிரத்னம்- கமல்ஹாசனின் 'தக் லைஃப்': கதைக்களம், OTT வெளியீடு மற்றும் பல கமல்ஹாசன்
    மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை அமைப்புகள் 2026க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்; ரஷ்யா அறிவிப்பு ரஷ்யா
    ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்! ஓபன்ஏஐ

    கோவை

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை என்ஐஏ
    மதுரைக்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி - 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை மதுரை
    கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் பதிவு செய்த ரவுடி கும்பல் தமிழ்நாடு
    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு

    கேரளா

    வாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு இந்தியா
    2047க்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி: 75க்கும் மேற்பட்ட PFI நபர்கள் கைது இந்தியா
    கன்னியாகுமரிக்கு வந்த இந்திய ஜனாதிபதி - தமிழக ஆளுநர் வரவேற்றார் கன்னியாகுமரி
    கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி இந்தியா

    காவல்துறை

    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது தமிழ்நாடு
    இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது தமிழ்நாடு

    காவல்துறை

    அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர் டெல்லி
    சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர் சென்னை
    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு இந்தியா
    முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025