NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் பதிவு செய்த ரவுடி கும்பல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் பதிவு செய்த ரவுடி கும்பல்
    கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் பதிவு செய்த ரவுடி கும்பல்

    கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராம் பதிவு செய்த ரவுடி கும்பல்

    எழுதியவர் Nivetha P
    Feb 17, 2023
    01:53 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவையில் ஒரேநாளில் மூன்று கொலைகள் நடந்ததையடுத்து, ஒரு கொலையில் துப்பாக்கிசூடு நடந்தது போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நீதிமன்ற வளாகத்தின் அருகில் கோகுல்(23) என்பவர் வெட்டி கொலைசெய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக 10பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், ஒருவர் சரணடைந்துள்ளார்.

    போலீசாரை தாக்கிவிட்டு தப்பமுயன்ற ஒருவரை போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளார்கள்.

    கோவை முக்கிய நகரங்களில் இருதரப்பட்ட ரவுடி கும்பல் அடிக்கடி மோதிகொண்டு தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் நிகழ்வுகளை நடத்திவந்ததும் அண்மையில் தெரியவந்துள்ளது.

    2021ம் ஆண்டு ஸ்ரீராம் என்பவர் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    அதற்கு பழிவாங்கும் செயலாகவே கோகுல் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இதனைதொடர்ந்து கோவை ரத்தினகிரி பகுதியை சேர்ந்த ரவுடி கும்பல் இன்ஸ்டாகிராம் பதிவில் அடிக்கடி மோதிகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    50க்கும் மேற்பட்ட வீடியோக்கள்

    கத்தி, அரிவாள், துப்பாக்கிகளை கொண்டு இன்ஸ்டாகிராம் பதிவுகள்

    மேலும் இதுவரை நடந்த அனைத்து கொலைகளும் இந்த இரண்டு கும்பல்களால் முன்கூட்டியே இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' பதிவுகளில் செய்யப்பட்டுள்ளது.

    அந்த பதிவுகளை கண்ட போலீசாரே சற்று அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

    அந்த பதிவுகளில் ரவுடி கும்பல் கையில் கத்தி, அரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஏந்தியாறு சினிமா மற்றும் கானா பாடல்களுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்கள்.

    இது போன்று 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

    இந்த கும்பலை 2 ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் வழிநடத்தி வருகிறார், ஆனால் அவர் இதுவரை கோவைக்கு வரவில்லை என்னும் தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

    அவர் தனது கும்பலுக்கு தனது அறிவுறுத்தல் மற்றும் கட்டளைகளை இன்ஸ்டாகிராம் வாயிலாகவே பகிர்ந்து வந்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! மாவட்ட செய்திகள்
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை கன்னியாகுமரி
    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் கோவை
    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் கோவை
    ஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல் ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025