NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
    இந்தியா

    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
    எழுதியவர் Nivetha P
    Mar 27, 2023, 05:59 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழக சட்டப்பேரவையில் மகளிர் உரிமைதொகை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(மார்ச்.,27) பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தற்போதைய காலகட்டத்தில் மகளிர் உதவிதொகை திட்டம் மகத்தான திட்டமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு வளமான, வலிமையான மாநிலமாக மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை அறிவித்துவருகிறது. தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் மட்டுமல்லாமல் அளிக்கப்படாத விஷயங்களும் செய்யப்பட்டுவருகிறது. சமூகத்தில் வெற்றிப்பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு பெண் இருப்பார். அந்த பெண்களை கருத்தில் கொண்டே இந்த உரிமைதொகை திட்டம் Universal Basic Incomeஎன்னும் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார். தொடர்ந்து இந்த திட்டத்தின்மூலம் வறுமை குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகள் கல்வி மற்றும் பெண்களின் தன்னம்பிக்கை உயரும் என்னும் அடிப்படையில் தான் இந்தத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    பெண்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உரிமைத்தொகை திட்டம்

    தொடர்ந்து பேசிய அவர், மகளிர் உரிமை தொகை இரண்டு நோக்கங்களை கொண்டது. இது பெண்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம். மாதம் ரூ.1000 என்பது பெண்களின் வறுமையை ஒழித்து, சுயமரியாதையோடு அவர்கள் வாழ வழிவகுக்கும் என்று கூறினார். இது தேவைப்படும் குடும்ப தலைவிகளுக்கு நிச்சயம் வழங்கப்படும். நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் உள்ள பெண்கள் என தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பினை வழங்கும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். விரைவில் இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு

    மு.க ஸ்டாலின்

    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது
    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் தமிழ்நாடு
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்
    தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது தமிழ்நாடு

    தமிழ்நாடு

    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் இந்தியா
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் சென்னை
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி ஈரோடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023