NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
    இந்தியா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023, 09:05 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
    சென்னிமலை முருகர் மலைக்கோயில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் வரும் 28ம் தேதி துவக்கம்

    ஈரோடு சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக 15 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இங்கு தேரோட்டம் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்தாண்டு தேரோட்ட திருவிழா வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூச தேர்த்திருவிழா நடத்துவது குறித்த அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று(ஜன., 22) நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தேரோட்டம் நடைபெறும் நாளான வரும் பிப்ரவரி 5ம் தேதியும், 6ம் தேதியும் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு செல்ல கார்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    பாதுகாப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் அமைக்க ஏற்பாடு

    இதனை தொடர்ந்து திருவிழா நடைபெறும் இந்த 15 நாட்களும் மலைக்கோயில் மற்றும் அடிவாரத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கவும், பக்தர்களின் வசதிக்காக காங்கேயம், ஊத்துக்குளி, அறச்சலூர் பெருந்துறை போன்ற பகுதிகளில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்போவதாகவும் தெரிகிறது. அதனையடுத்து குடிநீர், கழிப்பறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 5ம்தேதி நடக்கிறது, இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்து தெற்கு ராஜவீதி சந்திப்பில் நிறுத்துகிறார்கள். இதனையடுத்து பிப்ரவரி 10ம்தேதி நிறைவுறும் இந்த தேர்த்திருவிழாவிற்கு இந்தாண்டு அதிக பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு தற்போது தேரினை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திருவிழா

    சமீபத்திய

    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி ஈரோடு
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    மும்பையில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் தமிழ் திரை பிரபலங்கள் பட்டியல் கோலிவுட்
    புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு புதுச்சேரி

    தமிழ்நாடு

    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள் பத்மஸ்ரீ விருது
    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா

    திருவிழா

    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023