NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருமணமான பெண்களுக்கு நடத்தப்பட்ட அழகி போட்டியில் பட்டம் வென்ற சென்னை பெண்மணி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருமணமான பெண்களுக்கு நடத்தப்பட்ட அழகி போட்டியில் பட்டம் வென்ற சென்னை பெண்மணி 
    திருமணமான பெண்களுக்கு நடத்தப்பட்ட அழகி போட்டியில் பட்டம் வென்ற சென்னை பெண்மணி

    திருமணமான பெண்களுக்கு நடத்தப்பட்ட அழகி போட்டியில் பட்டம் வென்ற சென்னை பெண்மணி 

    எழுதியவர் Nivetha P
    Oct 17, 2023
    08:20 pm

    செய்தி முன்னோட்டம்

    பெண்கள் என்றாலே அழகு தான், இந்நிலையில் திருமணமான பெண்களுக்கு என்று பிரத்யேகமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஓர் அழகி போட்டி நடத்தப்பட்டது.

    இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் நோக்கத்துடன் 100க்கும் மேற்பட்ட திருமணமான பெண்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்திருந்தனர்.

    அதன்படி இப்போட்டியில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த மீனா கல்யாண் என்னும் பெண்மணியும் பங்கேற்றார்.

    பல கட்டங்களாக நடத்தப்பட்ட இப்போட்டியில் மீனா கல்யாண் தொடர்ந்து முன்னேறி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து அவர் இறுதி சுற்றிற்கும் முன்னேறிய நிலையில், இந்தியாவின் கலாச்சாரம் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் கலாச்சாரத்தினை வெளிப்படுத்தி இந்த அழகி போட்டியில் பட்டத்தை வென்றுள்ளார்.

    அழகி போட்டியின் பட்டத்தை வென்ற இவர் சென்னை திரும்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.

    திருமணம் 

    'என் லட்சியத்தை அடைந்து விட்டேன்' - மீனா கல்யாண் 

    அப்போது அவர் பேசுகையில், 'எனக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்தது. அதன் பின்னர் எனது உடலும் பருமனாகி விட்டது. பலரும் எனது உடல் பருமனை பார்த்து கேலி செய்தார்கள்' என்று கூறினார்.

    மேலும் பேசிய அவர், 'உடல் பருமனை குறைக்கும் படியும் பலரும் எனக்கு அறிவுரை செய்தனர். இதனால் எனக்கு மன அழுத்தம் அதிகரித்தது' என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து, 'இதனால் எதையாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணிய நான், சாதித்தால் மட்டுமே ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தில் இருந்து வெளிப்பட முடியும் என்றும் கருதினேன்' என்றும்,

    'இதனால் மனம் தளராது பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றேன். என் லட்சியத்தையும் அடைந்து விட்டேன்' என்றும் மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிலிப்பைன்ஸ்
    அழகி போட்டி
    சென்னை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பிலிப்பைன்ஸ்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி உலகம்
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா
    பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி உலகம்
    பிபா உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வெற்றி; வரலாறு படைத்த பிலிப்பைன்ஸ் கால்பந்து

    அழகி போட்டி

    பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொள்ள இனி உச்சபட்ச வயது வரம்பு இல்லை  வாழ்க்கை
    உருகுவே நாட்டின் முன்னாள் உலக அழகி போட்டியாளர் 26 வயதில் மரணம்  புற்றுநோய்

    சென்னை

    காரின் பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுநர் - பலியான பாதசாரி விபத்து
    டைம்ஸ் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 91 இந்திய பல்கலைக்கழகங்கள்  இந்தியா
    வறிய நிலையிலுள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி  மு.க ஸ்டாலின்
    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்  பெட்ரோல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025