NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது
    கட்டாக்கில் உள்ள ரயில்வே போலீஸாரிடம் இருக்கும் வழக்கு நாளை சிபிஐக்கு மாற்றப்படும்.

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது

    எழுதியவர் Sindhuja SM
    Jun 05, 2023
    04:17 pm

    செய்தி முன்னோட்டம்

    275 பேரைக் கொன்ற பாலசோர் ரயில் விபத்து "அலட்சியத்தால்" ஏற்பட்டது என்று ஒடிசா காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    இந்த விசாரணை விரைவில் மத்திய புலனாய்வுப் பிரிவினரிடம்(சிபிஐ) ஒப்படைக்கப்படும்.

    "தற்போதைக்கு, எந்த ரயில்வே ஊழியர்களின் மீதும் குற்றம் கண்டறியப்படவில்லை. இது விசாரணையின் போது கண்டறியப்படும்" என்று முதல் தகவல் அறிக்கையில்(FIR) கூறப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நேற்று இந்திய ரயில்வே கோரிக்கை விடுத்திருந்தது.

    மேலும், ரயில்கள் இருப்பதைக் கண்டறியும் எலக்ட்ரானிக் இன்டர்லாக் சிஸ்டம் தவறாக கையாளப்பட்டிருக்கலாம் என்றும் இந்திய ரயில்வே கூறி இருக்கிறது.

    உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான "கவாச்" விபத்து நடந்த பாதையில் இல்லை.

    details

    ரயில்வே போலீஸாரிடம் இருக்கும் வழக்கு நாளை சிபிஐக்கு மாற்றப்படும்

    அப்படியே அது நடைமுறையில் இருந்திருந்தாலும், இதுபோன்ற விபத்தைத் தடுக்க இந்த அமைப்பு உதவியாக இருந்திருக்காது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நாளை சிபிஐ குழு விபத்து நடந்த இடத்திற்கு சென்று, தனது விசாரணையை தொடங்கும்.

    மேலும், கட்டாக்கில் உள்ள ரயில்வே போலீஸாரிடம் இருக்கும் வழக்கு நாளை சிபிஐக்கு மாற்றப்படும்.

    கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 288 இல் இருந்து 275 ஆக திருத்தப்பட்டுள்ளது. சில உடல்களை தவறாக இரண்டு முறை எண்ணிவிட்டதாக ஒடிசா அரசாங்கம் இதற்கு விளக்கம் அளித்திருந்தது.

    187 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களால் உரிமை கோரப்படும் வரை அந்த உடல்களை வைத்திருப்பது உள்ளூர் நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும்,

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    இந்தியா

    சுயமரியாதை மாதம்: LGBTQIA+ சமூகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு  காங்கிரஸ்
    தாய்லாந்து ஓபன் 2023 : இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி! பேட்மிண்டன் செய்திகள்
    அலுவலகம் வந்து பணி செய்யாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறதா டிசிஎஸ்? டிசிஎஸ்
    தனது பதவியில் இருந்து விலகிய ஒன்பிளஸ் இந்தியாவின் சிஇஓ.. ஏன்? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025