NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் 
    மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம்

    மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 18, 2023
    01:43 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரை மாநகரை சேர்ந்த ஸ்டாலின் பாஸ்கர் என்னும் வழக்கறிஞர் மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.

    அந்த வழக்கின்படி, 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து வந்த நிலையில் மேலூர் தேர்தல் அதிகாரி மற்றும் தாசில்தாருமான காளிமுத்து என்பவர் தன்னை மு.க.அழகிரி தரப்பினர் தாக்கியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரின் அடிப்படையில் கிட்டத்தட்ட 21 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

    2020ல் இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் அரசியல் செல்வாக்கு இருக்கும் காரணத்தினால் இந்த வழக்கை மூடி மறைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

    எனவே, இந்த வழக்கின் விசாரணையினை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

    விசாரணை 

    'மனுதாரரின் இந்த மனு சாகசமிக்கதாக பார்க்கப்படுகிறது' - நீதிபதிகள் 

    அதன்படி இந்த வழக்கின் விசாரணையானது உச்ச நீதிமன்றம் நீதிபதிகளான சஞ்சய் கரோல் மற்றும் ரிஷிகேஷ் ராய் உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று(அக்.,17) வந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'மதுரையில் நடக்கும் இந்த குற்ற வழக்கால் அரசு தரப்புக்கோ அல்லது மனுதாரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என்று குறிப்பிட்டனர்.

    மேலும் அவர்கள், 'இந்த வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரும் இந்த வழக்கும் ஏற்புடையதல்ல' என்றும் தெரிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து, மனுதாரரின் இந்த மனு சாகசமிக்கதாக பார்க்கப்படுகிறது.

    இதனால் மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    உச்ச நீதிமன்றம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    மதுரை

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது  எடப்பாடி கே பழனிசாமி
    மதுரை உணவகத்தில் பார்சல் உணவில் பிளேடு கிடந்ததாக புகார் - அதிகாரிகள் விசாரணை  உணவு பாதுகாப்பு துறை
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    மதுரை மெட்ரோ: 27 ஸ்டேஷன்களுடன், 32 கி.மீ., வரை நீடிக்கப்படுவதாக அறிவிப்பு  மெட்ரோ

    உச்ச நீதிமன்றம்

    ஆகமவிதிப்படி தேர்ச்சிப்பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு  சேலம்
    'சட்டப்பிரிவு 35A ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்துவிட்டது': தலைமை நீதிபதி ஜம்மு காஷ்மீர்
    ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பு மனுதாக்கல் செந்தில் பாலாஜி
    'ஜம்மு காஷ்மீர் எப்போது மீண்டும் மாநிலமாக்கப்படும்': மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி  மத்திய அரசு

    காவல்துறை

    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    நடிகை விஜயலட்சுமி விவகாரம் - மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்கிய சென்னை காவல்துறை  சீமான்
    திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்  திமுக
    என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு காவல்துறை

    காவல்துறை

    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை  விநாயகர் சதுர்த்தி
    வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில பெண் பாலியல் பலாத்காரம் - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    'சவர்மா' சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் - இறைச்சி விற்பனையாளர் உள்பட 4 பேர் கைது தமிழ்நாடு
    சீமான் வழக்கு - 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி சீமான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025