பெங்களூரு: போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே மடிக்கணினியில் பணிபுரியும் பெண்ணின் புகைப்படம் வைரல்!
இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூரு அதன் கலாச்சாரம் மற்றும் போக்குவரத்துக்கு பெயர் பெற்றது. நெரிசலான சாலையில் ராபிடோ பைக்கில் செல்லும் ஒரு பெண் தனது மடிக்கணினியில் வேலை செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோரமங்களா-அகாரா-அவுட்டர் ரிங் ரோடு பேட்ச் வழியில் இந்த படம் எடுக்கப்பட்டது. அதன் புகைப்படத்தை நிஹார் லோஹியா என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பதிவு செய்த சிறிது நேரத்திலேயே வைரலாக தொடங்கியது. "பெங்களூருவில் நடக்கும் உச்சகட்ட தருணம். ரேபிடோ பைக்கில் அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் " என்று தலைப்பு எழுதப்பட்டிருந்தது.