NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் 
    மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் 
    இந்தியா

    மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் 

    எழுதியவர் Nivetha P
    September 17, 2023 | 03:09 pm 1 நிமிட வாசிப்பு
    மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் 
    மகளிர் உரிமை தொகையில் பிடித்தம் செய்ய கூடாது - வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

    தமிழ்நாடு மாநிலம் முழுவதும் கடந்த செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும். இதன் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் பயனடையவுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.1,000ல் இருந்து சேவை கட்டணம் என்னும் பெயரில் சில வங்கிகள் பணத்தை பிடித்தம் செய்ததால், குறைந்த அளவிலான தொகையே பயனாளர்களுக்கு சென்று சேர்ந்ததாக புகார்கள் எழுந்தது.

    முதல்வர் உதவிமைய தொலைபேசி எண் மூலம் புகாரளிக்கலாம் - நிதியமைச்சர் 

    இதனை தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்தில் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்ய கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், மகளிர் உரிமைத்தொகை கீழ் வரவு வைக்கப்படும் பணத்தில் பிடித்தம் செய்ய கூடாது என்று தமிழக அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மீறினால் அந்த வங்கியின் பண பரிவர்த்தனை வேறுவங்கிக்கு மாற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது போன்று உரிமை தொகையில் பிடித்தம் செய்யும் வங்கிகள் குறித்து புகாரளிக்க 1100 என்னும் முதல்வர் உதவிமைய தொலைபேசி எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    நிதியமைச்சர்
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    தமிழக அரசு

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் - நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு மு.க ஸ்டாலின்
    வங்கி கணக்குகளில் க்ரெடிட்டானது ரூ.1000 - மகிழ்ச்சியில் குடும்பத்தலைவிகள்  தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை தருகிறது: கர்நாடக முதல்வர் பேட்டி கர்நாடகா
    விநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு  விநாயகர் சதுர்த்தி

    நிதியமைச்சர்

    வன்முறையினை தூண்டினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை  பாமக
    ஆதரவற்றோர், முதியோர் உதவித்தொகையினை உயர்த்த முடிவு - தமிழக அரசு  மு.க ஸ்டாலின்
    '6 முஸ்லீம் நாடுகளில் குண்டு வீசப்பட்டது': பராக் ஒபாமாவிற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி இந்தியா
    நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன்  திருமணம் இந்தியா

    மு.க ஸ்டாலின்

    காவிரி நதிநீர் விவகாரம் - மத்திய அமைச்சரை சந்திக்கும் எம்.பி.க்கள் குழு கர்நாடகா
    பெண்கள் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் 145வது பிறந்தநாள்  தமிழ்நாடு
    திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்  திமுக
    உண்மைக்கு புறம்பான தகவல்களை அளிக்கிறது கர்நாடக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்  திமுக
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023