NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை
    'ஆவின்' பால் பொருட்கள்

    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

    எழுதியவர் Nivetha P
    Dec 30, 2022
    10:43 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களை வாங்காத பாலகங்களின் அனுமதியை ரத்து செய்ய 'ஆவின் நிர்வாகம்' முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஆவின் நிறுவனமானது பால் மட்டுமின்றி பால் சார்ந்த 200க்கும் மேற்பட்ட பொருட்களை தயார் செய்கிறது.

    இந்நிலையில் ஆவின் பாலகங்களில் மட்டுமின்றி தனியார் சூப்பர் மார்க்கெட்களிலும் ஆவின் பால் பொருட்கள் விற்கப்படுகிறது.

    அதே போல், ஆவின் பாலகங்களை நடத்த தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆவினில் பால் கொள்முதல் செய்ய சமூக வலைத்தளத்தில் ஓர் குழுவும், பால் பொருட்களை கொள்முதல் செய்ய மொபைல் போன் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த செயலி மூலம் பால் பொருட்களை முன்பதிவு செய்தால் மறுநாள் மாலை பதிவு செய்த பால் பொருட்கள் கிடைத்துவிடும்.

    ரூ.10,000க்கு கொள்முதல் செய்யாவிட்டால் அனுமதி ரத்து

    'ஆவின்' பால் பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை

    இவ்வளவு வசதிகளை ஆவின் நிறுவனம் செய்துள்ள நிலையிலும், பாலகம் நடத்தும் பலர் பால் பொருட்களை கொள்முதல் செய்வதில்லை.

    ஆவின் பாலகம் என்ற பெயரில் டீ கடைகளையும், மளிகை கடைகளையும் நடத்தி பாலை மட்டும் விற்பனை செய்கிறார்களே தவிர, பால் பொருட்கள் அங்கு மக்களுக்கு கிடைப்பதில்லை.

    இதனையடுத்து அனைத்து இடங்களிலும் தங்கு தடையின்றி ஆவின் பால் பொருட்கள் கிடைக்க ஆவின் நிறுவனம் ஓர் முடிவினை எடுத்துள்ளது.

    அதன்படி, இதன் முதற்கட்டமாக அனைத்து பாலகங்களும் வாரம் ஒரு முறை கண்டிப்பாக ரூ.10,000க்கு ஆவின் பால் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

    அப்படி செய்ய தவறினால் அந்த பாலகங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாநிலங்கள்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    தமிழ்நாடு

    கேரளாவில் மீண்டும் நர பலியா? - காவல் துறை இந்தியா
    பெரியாரின் பெண்ணியம்! நினைவு கொள்வோம் பெரியாரை! இந்தியா
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் எடப்பாடி கே பழனிசாமி
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025