NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் இளைஞர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் இளைஞர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் நுழைந்த இளைஞர்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் இளைஞர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

    எழுதியவர் Nivetha P
    Mar 23, 2023
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் பெரும்பாலான பக்தர்கள் வந்துசெல்வர், திருமஞ்சன கோபுரம் வழியேவும் சிலர் வருவார்கள்.

    நேற்று(மார்ச்.22) யுகாதி பண்டிகை விடுமுறை தினம் என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    இந்நிலையில், திருமஞ்சன கோபுரம் வழியே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் கத்தியுடன் பக்தர்களை மிரட்டியவாறு கோயிலுக்குள் நுழைந்துள்ளார்.

    திடீரென கோயில் அலுவலகத்திற்குள் சென்ற அவர் அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசியுள்ளார்.

    அலுவகத்திற்குள் அமர்ந்து கொண்டு சிறிது நேரம் அனைவரையும் மிரட்டிக்கொண்டிருந்த அவரை பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறை உதவியோடு பக்தர்கள் சிலர் மடக்கி பிடித்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

    தொடர் விசாரணை

    அடிபட்ட இளைஞரை மருத்துவமனையில் சேர்த்த போலீசார்

    கத்தியுடன் நுழைந்த நபரை கோயிலிருந்த பக்தர்கள் சிலர் தாக்கியதில் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் கொண்டு சென்று அனுமதித்தனர்.

    இது குறித்து அவருடன் வந்த அவரது காதலியான ஜெனிபர் என்னும் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளார்கள்.

    விசாரணையில் அந்த இளைஞர் பெங்களூரை சேர்ந்த அப்பு என்பதும்,

    இவர்களை சிலர் துரத்தியதால் கோயிலுக்குள் வந்ததாகவும் கூறியுள்ளார்.

    இவர்கள் எதற்கு பெங்களூரில் இருந்து வந்தார்கள்? இவர்களை துரத்தியது யார்? என்ற மற்ற தகவல்களை கண்டறிய போலீசார் தொடர்ந்து தங்கள் விசாரணையினை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    பெங்களூர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் ஹரியானா

    பெங்களூர்

    வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர் கர்நாடகா
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் இசையமைப்பாளர்கள்
    ஏரோ இந்தியா 2023: 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா என பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025