NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரபிரதேசத்தில் நடந்த மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரபிரதேசத்தில் நடந்த மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

    உத்தரபிரதேசத்தில் நடந்த மத நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jul 02, 2024
    04:39 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இன்று நடந்த மதக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழப்புகளை உறுதிப்படுத்திய தலைமை மருத்துவ அதிகாரி ராஜ்குமார் அகர்வால், "எங்களுக்கு இதுவரை 27 உடல்கள் கிடைத்துள்ளன" என்று கூறினார்.

    இன்று ரதிபன்பூரில் உள்ள சிவபெருமானுக்கு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அந்த நிகழ்ச்சி முடிவடையும் போது, ​​கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.

    இதனையடுத்து, மொத்தம் 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் எட்டா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியா 

    23 பெண்கள், 3 குழந்தைகள் பலி

    மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவத்தை அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறிய அவர், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் அலிகார் ஆணையர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுவரை 23 பெண்கள், 3 குழந்தைகள் மற்றும் 1 ஆணின் சடலங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    உத்தரப்பிரதேசம்

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: QR குறியீடு நன்கொடை மோசடி குறித்த எச்சரிக்கை அயோத்தி
    ஜனவரி 17ஆம் தேதி நடக்க இருந்த அயோத்தி ராமர் சிலையின் ஊர்வலம் ரத்து  அயோத்தி
    'ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சி': அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணித்தது காங்கிரஸ் அயோத்தி
    தமிழ்நாட்டிலிருந்து அயோத்திக்கு பட்டாசு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து வெடித்தது; வைரலாகும் காணொளி  அயோத்தி

    இந்தியா

    பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது: ஒரே வாரத்தில் 3 பாலங்கள் தரைமட்டம்  பீகார்
    நீட் தேர்வு மோசடி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்தது சிபிஐ  சிபிஐ
    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கெஜ்ரிவால்  டெல்லி
    மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவியேற்றார் பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப்  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025