NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல்
    புதுக்கோட்டையில் துவங்கிய தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி

    வெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல்

    எழுதியவர் Nivetha P
    Jan 09, 2023
    04:21 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு வழக்கம் போல் இந்தாண்டும் பெருமளவில் நடக்க ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று காலை 8.30 மணியளவில் துவங்கி நடைபெற்றுள்ளது.

    பாதுகாப்பு காரணமாக இரண்டு முறை இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மிகுந்த ஏதிர்பார்ப்புகளுக்கிடையில் நடந்த இந்த போட்டியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் துவங்கி வைத்தனர்.

    தஞ்சை மருத்துவமனைக்கு

    400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்ட நிலையில், கிட்டத்தட்ட 74 பேர் காயமடைந்ததாக தகவல்

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கிட்டத்தட்ட 484 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

    சீறி பாய்ந்த காளைகளை பிடிக்க களத்தில் இறங்கிய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

    இதில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில், மின்விசிறி, ரொக்கப்பணம் போன்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் பாய்ந்ததில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் இரு காவலர்கள் என கிட்டத்தட்ட 74 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதில் படுகாயம் அடைந்த 10 பேர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பொங்கல் திருநாள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் முதல் அமைச்சர்
    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    சமஸ்கிருதம்-தமிழ்: பழமையான மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு என்ன செய்திருக்கிறது? இந்தியா
    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு செய்தி

    பொங்கல் திருநாள்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! இந்திய ரயில்வே
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள் ரயில்கள்
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025