NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல்
    இந்தியா

    வெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல்

    வெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல்
    எழுதியவர் Nivetha P
    Jan 09, 2023, 04:21 pm 0 நிமிட வாசிப்பு
    வெற்றிகரமாக அரங்கேறியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி - 400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டதாக தகவல்
    புதுக்கோட்டையில் துவங்கிய தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு வழக்கம் போல் இந்தாண்டும் பெருமளவில் நடக்க ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நேற்று காலை 8.30 மணியளவில் துவங்கி நடைபெற்றுள்ளது. பாதுகாப்பு காரணமாக இரண்டு முறை இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மிகுந்த ஏதிர்பார்ப்புகளுக்கிடையில் நடந்த இந்த போட்டியினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் துவங்கி வைத்தனர்.

    400க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்ட நிலையில், கிட்டத்தட்ட 74 பேர் காயமடைந்ததாக தகவல்

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட கிட்டத்தட்ட 484 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சீறி பாய்ந்த காளைகளை பிடிக்க களத்தில் இறங்கிய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். இதில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில், மின்விசிறி, ரொக்கப்பணம் போன்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் பாய்ந்ததில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் இரு காவலர்கள் என கிட்டத்தட்ட 74 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் படுகாயம் அடைந்த 10 பேர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பொங்கல் திருநாள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    தமிழ்நாடு

    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு ஆஸ்திரேலியா
    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் விமான சேவைகள்

    பொங்கல் திருநாள்

    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது மதுரை
    திருக்குறள் மீதுள்ள ஆர்வம் - புதுவித கூகுள் டூடூலை வடிவமைத்த வாலிபர் கூகுள்
    களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் சென்னை
    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023