NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
    எழுத்தாளர் மு.ராஜேந்திரன்

    மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2022
    02:11 am

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, போன்ற 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்வு செய்து, மத்திய அரசு சார்பில் அதனை எழுதிய எழுத்தாளர்களுக்கு உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அளிக்கப்படும்.

    அதில் தாமிர பட்டயம் விருதுடன், ரூ.1 லட்சம் பணமும் வழங்கப்பட்டு கவுரவப்படுத்துவது வழக்கம்.

    அதன்படி 2022ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ் படைப்பிற்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவல் தேர்வாகியுள்ளது.

    இந்த நாவல், இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டதாகும்.

    1801ம் ஆண்டு 6 மாதங்கள் நடந்த காளையார் போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்டுள்ள இந்த நாவலில் அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை சூழல், ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

    விருது பெற்றது குறித்து ஊடகத்தில் பேட்டி

    அரசின் வேளாண் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் மு.ராஜேந்திரன்

    சாகித்ய அகாடமி விருதிற்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் மு.ராஜேந்திரன் அவர்கள் தமிழ்நாடு அரசின் வேளாண் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    மதுரை மாவட்டம், வடகரை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், தமிழ் இலக்கியத்திலும் தமிழக வரலாற்றின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டவர்.

    இந்த விருது பெற்றதை குறித்து ராஜேந்திரன் அவர்கள் ஒரு ஊடகத்தில் பேட்டியளித்துள்ளார்.

    அதில் அவர், "காலா பாணி நாவலுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். இதில் அதிகம் அறியப்படாத ஜெகநாதர் ஐயர், மனக்காடு சாமி, மருதுபாண்டியர் மகன் 15 வயது சிறுவன் துரைசாமி ஆகியோர் குறித்து எழுதியது சந்தோஷமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    நாகரிகம் வளர்ச்சி அடைந்ததில் கோயில்களுக்கு பெரும் பங்கு உண்டு: சென்னை உயர்நீதிமன்றம் இந்தியா
    தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய இடங்கள் யார் யாருக்கு? ஸ்டாலின்
    17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு - டெல்லியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் இந்தியா
    தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை! விவரக்குறிப்புகள்

    இந்தியா

    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! சீனா
    'இன்டிபெண்டன்ஸ்': ரிலையன்ஸின் புதிய FMCG பிராண்ட் அறிமுகம் தமிழ்நாடு
    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! நீட் தேர்வு
    இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்! இந்திய ரயில்வே
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025