NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
    இந்தியா

    மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

    மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2022, 02:11 am 1 நிமிட வாசிப்பு
    மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
    எழுத்தாளர் மு.ராஜேந்திரன்

    ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, போன்ற 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்வு செய்து, மத்திய அரசு சார்பில் அதனை எழுதிய எழுத்தாளர்களுக்கு உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அளிக்கப்படும். அதில் தாமிர பட்டயம் விருதுடன், ரூ.1 லட்சம் பணமும் வழங்கப்பட்டு கவுரவப்படுத்துவது வழக்கம். அதன்படி 2022ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ் படைப்பிற்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவல் தேர்வாகியுள்ளது. இந்த நாவல், இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டதாகும். 1801ம் ஆண்டு 6 மாதங்கள் நடந்த காளையார் போராட்டத்தை முன்வைத்து எழுதப்பட்டுள்ள இந்த நாவலில் அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை சூழல், ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் குறித்தும் தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

    அரசின் வேளாண் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் மு.ராஜேந்திரன்

    சாகித்ய அகாடமி விருதிற்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் மு.ராஜேந்திரன் அவர்கள் தமிழ்நாடு அரசின் வேளாண் துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மதுரை மாவட்டம், வடகரை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், தமிழ் இலக்கியத்திலும் தமிழக வரலாற்றின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டவர். இந்த விருது பெற்றதை குறித்து ராஜேந்திரன் அவர்கள் ஒரு ஊடகத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "காலா பாணி நாவலுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். இதில் அதிகம் அறியப்படாத ஜெகநாதர் ஐயர், மனக்காடு சாமி, மருதுபாண்டியர் மகன் 15 வயது சிறுவன் துரைசாமி ஆகியோர் குறித்து எழுதியது சந்தோஷமாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    தமிழ்நாடு

    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு இந்தியா
    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு மாவட்ட செய்திகள்
    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம் இந்தியா
    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா இந்தியா

    இந்தியா

    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன மத்திய பிரதேசம்
    இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு! ஸ்மார்ட்போன்
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் மோடி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023