NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை
    இந்தியா

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை
    எழுதியவர் Sindhuja SM
    Jan 25, 2023, 04:18 pm 1 நிமிட வாசிப்பு
    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை
    கலவரத்தின் போது மாநில முதல்வராக இருந்த மோடி, வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் போது 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை "ஆதாரம் இல்லாததால்" குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 22 பேரில் 8 பேர் வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே இறந்துவிட்டனர். அயோத்தியிலிருந்து இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற சபர்மதி ரயிலில் 59 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிப்ரவரி 2002இல் மதக் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த கலவரத்தின் போது, ​​குஜராத் மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை விமர்சிக்கும் "பிபிசி'ஸ் இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற பிபிசி ஆவணப்படம் குறித்து, இந்தியாவில் பெரும் சர்ச்சை நடந்து வரும் நிலையில், இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை: சோலங்கி

    கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது கிட்டத்தட்ட 2,000 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்ஷ் திரிவேதி குற்றம் சாட்டப்பட்ட 22 பேரையும் விடுதலை செய்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால்சிங் சோலங்கி, பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றம் ஆய்வு செய்தது, ஆனால் தடவியல் சோதனைகளில் ஆதாரங்கள் வலுவாக இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று தெரிவித்திருக்கிறார். 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாகவும் ஆனால் அவர்களில் பலர் மாற்றுக்கருத்து தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். 2002இல் நடைபெற்ற இந்த சம்பத்திற்கு 2003ஆம் ஆண்டில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2004ஆம் ஆண்டில் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    குஜராத்
    கலவரம்
    மோடி

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    இந்தியா

    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? தமிழ்நாடு
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ
    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் தமிழ்நாடு
    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா

    குஜராத்

    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி
    மோர்பி பால விபத்து: ஓரேவா குழும நிர்வாக இயக்குநருக்கு எதிராக தீர்ப்பு இந்தியா
    மோர்பி பால விபத்து நடக்கும் முன்பே 22 ஒயர்கள் உடைந்து தான் இருந்தன: விசாரணை அறிக்கை இந்தியா
    மருமகனுக்கு வாயில் சிகரெட் கொடுத்து வரவேற்ற மாமியார் - வைரல் வீடியோ வைரல் செய்தி

    கலவரம்

    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை

    மோடி

    பிரதமரின் கண்களில் பயம் தெரிகிறது: செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி இந்தியா
    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    மகாத்மா காந்தியின் வாக்கியங்களை ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ராகுல் காந்தி
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023