Page Loader
2 நாளாக பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட தெகிடி பட நடிகர் பிரதீப் கே விஜயன்
பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 நாளாக பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்ட தெகிடி பட நடிகர் பிரதீப் கே விஜயன்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 13, 2024
02:56 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் 'தெகிடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரதீப் கே விஜயன். இவர் பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த சம்பவம், கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப், கடந்த 2013 ஆம் ஆண்டு, நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிப்பில் வெளியான 'சொன்னா புரியாது' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் பல படங்களில், காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார். குறிப்பாக தெகிடி திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, திருட்டு பயலே 2, இரும்புத்திரை, கென்னடி கிளப் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இறப்பு

பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்த பிரதீப் 

பிரதீப், சென்னை பாலவாக்கத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவரை கடந்து இரண்டு நாட்களாக தொடர்பு கொள்ள முயற்சித்த அவரின் நண்பர்கள், சந்தேகமடைந்து வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். வீட்டின் கதவு உள் பக்கம் பூட்டப்பட்டு, உள்ளிருந்து துர்நாற்றம் வரவுமே இது குறித்து நண்பர்கள் காவல்துறைக்கு புகார் அளித்தனர். காவல் துறையினர் கதவை உடைத்து சென்று உள்ளே சென்று பார்த்தபோது பிரதீப் கே விஜயன் இறந்து கிடந்துள்ளார். இவர் மாரடைப்பு காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் அவரது உடல் பிரதாபரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.