Page Loader
தனது திருமண வாழ்க்கையை குறித்து மனம் திறந்து பேசியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி
பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி

தனது திருமண வாழ்க்கையை குறித்து மனம் திறந்து பேசியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி

எழுதியவர் Saranya Shankar
Dec 25, 2022
03:08 pm

செய்தி முன்னோட்டம்

பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி ஒரு பிரபல பாடகியாவார். ஜே.சி. டேனியல் குறித்து வெளியான மலையாள படமான செல்லுலாய்டில் என்ற திரைப்படத்தில் இவர் பாடிய 'காட்டே காட்டே' எனும் பாடல் இவரைப் பிரபலமாக மாற்றியது. பல மலையாள பாடல்களை பாடிய இவர், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளிவந்த குக்கூ படத்தில் இடம்பெற்ற கோடையில என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு வீர சிவாஜி படத்தில் சொப்பன சுந்தரி நான் தானே மற்றும் என்னமோ எதோ படத்தில் வரும் புதிய உலகை புதிய உலகை போன்ற ஹிட் பாடல்களை தமிழ் பாடியுள்ளார். பார்வையற்றவரான இவருக்கு 2016-ம் ஆண்டு திருமண நிச்சயமானது. பிறகு மனவேறுபாடு காரணமாக அவர் திருமண செய்ய மறுத்துவிட்டார்.

வைக்கம் விஜயலக்ஷ்மி

தன் திருமண வாழ்க்கையை பற்றி வைக்கம் விஜயலக்ஷ்மி கூறியது

இந்நிலையில் வைக்கம் விஜயலக்ஷ்மி அனூப் என்கிற மிமிக்ரி ஆர்டிஸ்டை 2018-ல் திருமணம் செய்துகொண்டார். சில மாதங்கள் அவருடன் வாழ்ந்த வைக்கம் விஜயலட்சுமி பின்னர் அவரைப் பிரிந்துவிட்டார். இந்நிலையில் ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைக்கம் விஜயலக்ஷ்மி தனது திருமண வாழ்க்கையை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் திருமண வாழ்க்கையில் தான் அனுபவித்த கஷ்டங்கள் பற்றி மலையாள மீடியாக்களில் பேசியிருக்கிறேன். தற்போது இங்கு கேட்டதால் அதை இங்கு கூறுகிறேன் என்று சொல்லி, அவரை முறைப்படி பிரிந்து ஓராண்டு காலம் ஆகிவிட்டதாகவும், எதிர்க்காலத்தில் திருமணம் செய்வதை பற்றி ஆலோசிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதனை பற்றி நினைத்தாலே பயமாக இருக்கிறது எனவும், இன்னும் நிறைய பாடல்கள் பாடவேண்டும் என்று நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.