Loading...
"கிழிந்து போகாது... தண்ணீரில் நனையாது..." இந்தியாவில் வரப்போகும் புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ வெளியிட்ட டெண்டர் விபரம்
இந்தியாவில் வரப்போகும் புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

"கிழிந்து போகாது... தண்ணீரில் நனையாது..." இந்தியாவில் வரப்போகும் புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ வெளியிட்ட டெண்டர் விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 18, 2026
06:23 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் கரன்சி அமைப்பை நவீனமயமாக்குவதற்கும், ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தற்பொழுது ஒரு புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாகப் பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் அடிப்படையிலான ரூபாய் நோட்டுகளை பரிசோதனை முறையில் அறிமுகம் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகளை ஆர்பிஐ தொடங்கியுள்ளது. இதற்காக, புதிய நோட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான சிறப்புப் பாலிமர் தாள்களை வழங்கக் கோரி உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.

முதற்கட்ட பரிசோதனை

10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளில் முதல் கட்டப் பரிசோதனை

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, ரிசர்வ் வங்கி இந்த பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுப் பரிசோதனையை ஆரம்பத்தில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளில் மட்டுமே செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த முதல்கட்ட கள சோதனைகளின் முடிவுகள் மற்றும் மக்களின் பயன்பாட்டுப் பின்னூட்டங்களின் அடிப்படையிலேயே, இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் நாடு தழுவிய அளவில் முழுமையாக புழக்கத்திற்குக் கொண்டு வரப்படுமா என்பது இறுதியாகத் தீர்மானிக்கப்படும்.

இந்த சோதனையானது இந்தியாவில் காகித நோட்டுகளுக்குப் பதிலாகப் பாலிமர் நோட்டுகளைக் கொண்டு வருவதற்கான முதல் உறுதியான மைல்கல்லாகும்.

டெண்டர் வெளியீடு

உலகளாவிய சப்ளையர்களுக்கு பிஆர்பிஎன்எம்பிஎல் (BRBNMPL) விடுத்துள்ள டெண்டர்

இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் கரன்சி அச்சிடும் பிரிவான பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL), உலகளாவிய நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் எக்ஸ்பிரஷன் ஆஃப் இன்ட்ரெஸ்ட் (EOI) டெண்டரை வெளியிட்டுள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளுக்குரிய பிரத்யேக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய, இருபக்கமும் நீட்டப்பட்ட பாலிப்ரோப்பிலீன் (BOPP) தாள்களை வழங்கக்கூடிய நிறுவனங்களை இந்த டெண்டர் கோருகிறது.

மொத்தம் 68,000 ரீம்கள் (Reams) பாலிமர் தாள்களைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ரீமில் 500 தாள்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கள்ள நோட்டுகள்

கள்ள நோட்டுகளைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சங்கள்

இந்த புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் பல பாதுகாப்பு அம்சங்கள் உட்பொதிக்கப்பட உள்ளன:

தெளிவான உருவப்படம் தெரியக்கூடிய வெளிப்படையான விண்டோ (Clear Portrait Window)

உலோக எண்கள் (Metallic Numeral

காந்தப் பண்புடைய போலித் தையல் இழை (Magnetic Pseudo Thread)

நிழல் உருவப் படம் (Shadow Image)

வானவில் வண்ணப் பேட்டர்ன் (Iridescent Pattern)

ADVERTISEMENT

சீனா, பாகிஸ்தான்

சீனா, பாகிஸ்தானுக்கு வைக்கப்பட்ட கடுமையான செக்

இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மிகக் கடுமையான பாதுகாப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.

டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் சீனா அல்லது பாகிஸ்தானில் தங்களுக்கு ஏதேனும் வணிகச் செயல்பாடுகள் இருந்தால், அவற்றை இந்தியத் திட்டப் பணிகளில் இருந்து முற்றிலும் தனிமைப்படுத்த வேண்டும்.

மேலும், இந்த இரு நாடுகளிலிருந்தும் எந்தவொரு மூலப்பொருட்களையும் பெறக்கூடாது என்றும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களை இந்தியப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் டிபிஐஐடி (DPIIT) குழுவிடம் முறைப்படி பதிவு செய்திருந்தால் மட்டுமே தகுதி பெறும்.

விலங்கு

விலங்குக் கொழுப்பு மற்றும் டிஎன்ஏ இருக்கக் கூடாது

டெண்டருக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் மத்திய வங்கிகளுக்குப் பாலிமர் தாள்களை வழங்கியதில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், தங்களது பாலிமர் தாள்களில் விலங்குகளின் கொழுப்பு அல்லது எந்தவிதமான டிஎன்ஏ மூலக்கூறுகளும் கலக்கவில்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த 1988 ஆம் ஆண்டிலேயே ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் தற்பொழுது உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் புழக்கத்தில் உள்ளன.

சாதாரண காகித நோட்டுகளை விட இவை தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் மிக நீண்ட காலம் உழைக்கும் என்பதால், ரூபாய் நோட்டுகளைத் திரும்பத் திரும்ப அச்சிடுவதற்கான அரசின் செலவுகள் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT