NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியது சாம்சங் தொழிலாளர் சங்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியது சாம்சங் தொழிலாளர் சங்கம் 

    காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியது சாம்சங் தொழிலாளர் சங்கம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 10, 2024
    03:40 pm

    செய்தி முன்னோட்டம்

    தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸின் தொழிலாளர்கள் சங்கம் சிறந்த ஊதியம் மற்றும் நன்மைகளை கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த சங்கத்தின் சுமார் 30,000 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் சங்கம்(NSEU) நடத்திய மூன்று நாள் பொது வேலைநிறுத்தத்தின் கடைசி நாளான இன்று இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் விருப்பம் காட்டாததால், இந்த முடிவை எடுத்ததாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

    தென் கொரியாவில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் NSEU, தங்களது வேலைநிறுத்தம் உற்பத்தியை பாதித்துள்ளதாக தெரிவித்தது. ஆனால், அதை சாம்சங் மறுத்துள்ளது.

     சாம்சங் 

     6,500 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதாக தகவல் 

    "சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு நிறுவனம் தயாராக உள்ளது" என்று சாம்சங் தெரிவித்துள்ளது.

    ஆனால், "முதல் பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகும் பேச்சுவார்த்தையில் ஈடுபட நிறுவனத்திற்கு விருப்பம் இல்லை. எனவே ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி காலவரையின்றி நடைபெறும் இரண்டாவது பொது வேலைநிறுத்தத்தை நாங்கள் அறிவிக்கிறோம்." என்று தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

    இதுவரை 6,500 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிற உறுப்பினர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று NSEU அழைப்பு விடுத்துள்ளது.

    திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 3,000 பேர் கலந்துகொண்டனர்.

    சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் செய்தித் தொடர்பாளர், எத்தனை தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்துள்ளார்கள் என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாம்சங்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    சாம்சங்

    சாம்சங்கின் புதிய 'கேலக்ஸி F54', பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    இந்த ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், பகுதி 1 ஸ்மார்ட்போன்
    புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி M34-ஐ வெளியிட்டது சாம்சங் ஸ்மார்ட்போன்
    'ஓபன்' என்ற பெயரை தங்கள் ஃபோல்டபிள் போன்களுக்குப் பயன்படுத்தவிருக்கும் ஒன்பிளஸ் ஃபோல்டபிள் போன்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025