LOADING...
இனி வாகனப் பதிவுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை; இன்று முதல் அமலாகிறது புதிய விதி
இனி வாகனப் பதிவுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை

இனி வாகனப் பதிவுக்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை; இன்று முதல் அமலாகிறது புதிய விதி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 01, 2025
10:55 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் புதிய மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் நடைமுறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை ஏற்று, இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் ஜீப்கள் போன்ற வணிக பயன்பாடு அல்லாத வாகனங்களுக்கு, டீலர் மூலமான பதிவு முறையை மாநிலப் போக்குவரத்துத் துறை திங்கட்கிழமை (டிசம்பர் 1) முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இனி புதிய வாகனங்களைப் பதிவு செய்வதற்காக, மோட்டார் வாகன ஆய்வாளர் முன் நேரில் கொண்டு வர வேண்டியதில்லை. இதன் மூலம் புதிய வாகனங்களை வாங்குபவர்கள் ₹1,500 முதல் ₹5,000 வரை ஆர்டிஓ கட்டணங்கள் என்ற பெயரில் செலுத்தி வந்த தொகையைச் சேமிக்க முடியும்.

நேரடி சோதனை

நேரடி சோதனை தேவையில்லை

மாநிலப் போக்குவரத்து ஆணையர் ஆர்.கஜலட்சுமி இது தொடர்பாக அனைத்து மண்டலப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில், மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் விதி 48B-ஐப் பின்பற்றி, ஆர்டிஓ அலுவலகங்களில் வாகனங்களின் நேரடிச் சோதனையை அதிகாரிகள் வலியுறுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, இனி வாகன டீலர்களே, வாகனத்தின் உரிமையாளரை முடிவு செய்த பிறகு, உற்பத்தியாளரின் இன்வாய்ஸ் மற்றும் தேவையான ஆவணங்களை வாகன் போர்ட்டலில் பதிவேற்றம் செய்து பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். ஆர்டிஓ அலுவலகங்கள் டீலர்களின் விண்ணப்பத்தைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு, ஸ்மார்ட் கார்டு பதிவுச் சான்றிதழ் ஸ்பீட் போஸ்ட் மூலம் வாங்குபவரின் வீட்டிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement