NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / மூடுபனி காலத்தில், விபத்துகளை தவிர்க்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூடுபனி காலத்தில், விபத்துகளை தவிர்க்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்
    மூடுபனி காலத்தில், வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

    மூடுபனி காலத்தில், விபத்துகளை தவிர்க்க இந்த வழிமுறைகளை பின்பற்றவும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 30, 2022
    09:18 am

    செய்தி முன்னோட்டம்

    குளிர் காலத்தில், வாகனத்தை பாதுகாக்க சில குறிப்புகள்

    மூடுபனி காலத்தில், பொதுவாக நிறைய விபத்துகள் ஏற்படுவதுண்டு. அதை தவிர்க்க, பின்வரும் சில வழிமுறைகளை பின்பற்றவும்.

    அடர்ந்த மூடுபனி சூழ்நிலையில் வாகனம் ஓட்டும் போது, உங்கள் வேகத்தை கண்காணிக்கவும். மெதுவாக வேகத்தை அதிகரிக்கவும், அதேபோல படிப்படியாக குறைக்கவும். எப்போதும் முந்த வேண்டாம், ஓரமாக செல்ல வேண்டாம்.

    ஹெட் லைட்களை ஆன் செய்யவும், டெயில் லேம்ப்கள், ஃப்ளாஷர்களை ஆன் செய்யவும், இதனால், மற்றவர்கள் உங்களைப் பார்த்து, பாதுகாப்பான தூரத்தைப் பின்பற்ற முடியும்.

    பார்வைத்திறன் 100 மீட்டருக்கும் குறைவாக இருந்தால், காரின் மூடுபனி விளக்கையும் ஆன் செய்யவும்.

    எப்போதும் ஹை- பீம் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் மூடுபனி, ஒளியை பிரதிபலிக்கும். இது வாகன ஓட்டிகளின் பார்வைக்கு இடையூறாகும்.

    மேலும் படிக்க

    வாகன ஓட்டிகள் கவனத்திற்கு

    பனிமூட்டமான நிலையில், ​​டயர்கள் மற்றும் ஹாரன்களின் சத்தங்கள், கண்ணுக்கு தெரியாத வாகனங்களின் தூரத்தை மதிப்பிட உதவும்.

    மூடுபனி ரோட்டில் ஓட்டும் போது, ஒரு குறிப்பிட்ட பாதையை தேர்வு செய்து, அதில் ஓட்டுவது உகந்தது. பாதை மாற கூடாது.

    வாகனத்தின், ஜன்னல்களையும், விண்ட்ஸகிரீன்-யும் சுத்தமாக, பார்வைக்கு இடையூறின்றி வைத்து இருப்பது மிக முக்கியம்.

    வெளியில் இருக்கும் மூடுபனியானது, வாகனத்தின் உட்புறத்தில் உறைவு தன்மையை ஏற்படுத்தும். அது கண்ணாடி மேல் படிந்து, வாகனஓட்டிகளுக்கு சிரமத்தை தரும். எனவே ஹீட்டர் பயன்படுத்தவும்.

    உங்களுக்கும், முன்னால் செல்லும் வாகனத்திற்கும் இடையில் போதிய இடைவெளியை வைத்திருப்பது மிகவும் முக்கியம். விபத்துகளை தவிர்க்க உதவும்.

    மூடுபனி வழியாக வாகனம் ஓட்டும்போது மிக முக்கியமான விஷயம் விழிப்புடன் இருப்பது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வாகனம்
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்
    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பாகிஸ்தான்
    தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை
    இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டம் தோல்வி; ஏவப்பட்ட சில நிமிடங்களில் EOS-09 மாயம் இஸ்ரோ

    வாகனம்

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார் காலெக்ஷன்ஸ் ரஜினிகாந்த்
    பிஎம்டபுள்யு சிஈ 04 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் ஆட்டோமொபைல்
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    செகண்ட் ஹேண்ட் கார் வாங்க போகிறீர்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஆட்டோமொபைல்

    ஆட்டோமொபைல்

    இத்திட்டத்தின் மூலம் 2.15 லட்சத்திற்கும் அதிகமான உதான் விமானங்கள் இயங்குகிறது ஆட்டோ
    புனே-வில் 1000 கோடி மதிப்பில் புதிய EV தொழிற்சாலை: மஹிந்திரா நிறுவனத்தின் முதலீடு வாகனம்
    ஜனவரி முதல் ரூ 30,000 வரை வாகன விலையை உயர்த்த ஹோண்டா திட்டம் கார்
    FASTag இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் சுரண்டிய நூதன கும்பல் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025