Page Loader
ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்!
ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா பயணம் - அம்சங்கள் என்ன?

ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்!

எழுதியவர் Siranjeevi
Mar 16, 2023
10:21 am

செய்தி முன்னோட்டம்

பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா ரயிலை கொடியசைத்து, ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து 18 நாள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. இந்த டீலக்ஸ் ஏசி டூரிஸ்ட் ரயில் யாத்திரை சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் முக்கிய நோக்கமாக ராமாயணம் மற்றும் ராமரின் வாழ்க்கை தொடர்பான முக்கிய இடங்களை உள்ளடக்கும். 18 நாட்கள் தொடரும் இப்பயணம் ரயிலின் முதல் நிறுத்தம் அயோத்தியில் இருக்கும், அங்கு சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோயில், ஹனுமான் கோயில் மற்றும் சரயுஆரத்தி ஆகியவற்றைப் பார்வையிடுவார்கள்.

ரயில் சுற்றுலா பயணம்

ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா பயணம் - 18 நாட்கள் பயணம்

அடுத்து, பாரத் மந்திரத் நந்திகிராம், பீகாரில் இருந்து சுற்றுலா பயணிகள் சீதா ஜியின் பிறந்த இடம் மற்றும் ஜனக்பூரில் (நேபாளம்) உள்ள ராம் ஜான்கி கோயிலுக்குச் செல்வார்கள். பின் ராம்ரேகாகாட் மற்றும் ராமேஷ்வர்நாத் கோவிலைத் தொடர்ந்து புனித கங்கையில் நீராடும். இறுதியில், காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் நடைபாதை, அடுத்த இலக்கு வாரணாசி ஆகும். முடிந்ததும், பயணிகள் சாலை வழியாக பிரயாக்ராஜ், அழைத்துச் செல்லப்படுவார்கள். வாரணாசியில் இரவு தங்கும் வசதி வழங்கப்படும். இந்த ரயில் தனது பயணத்தின் 18வது நாளில் மீண்டும் டெல்லிக்கு திரும்புகிறது. இந்த முழு சுற்றுப்பயணத்தில் விருந்தினர்கள் சுமார் 7500 கிமீ பயணம் செய்வார்கள். டிக்கெட்டின் விலை ஒரு நபருக்கு ரூ.1,14,065, 1 கிளாஸ் ரூ.1,46,545 வரும் என தெரிவித்துள்ளது.