NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு
    ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு

    ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - உக்ரைன் அரசு

    எழுதியவர் Nivetha P
    Feb 23, 2023
    02:46 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்யா உக்ரைன் இடையே போர் ஏற்பட்டு நாளையோடு ஓராண்டு நிறைவடைகிறது.

    இந்நிலையில் இன்று(பிப்.,23) ஐ.நா.சபையில் உக்ரைனின் சுதந்திரத்தை காக்க தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.

    இதுவரை நடந்த ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் வாக்கெடுப்புகளில் இந்தியா கலந்துகொள்ளாமல் விலகியே இருந்தது.

    அதனையடுத்து தற்போது கொண்டுவரப்படும் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தினை ஆதரிக்க வேண்டும் என்று உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அலுவலகத்தின் தலைவரான ஆன்ட்ரி யர்மாக், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    ஐநா பொதுசபை

    10 அம்ச அமைதி திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தகவல்

    ஆன்ட்ரி யர்மாக் பேசியதாவது, ஐநா பொதுசபையில் நடைபெறும் ஓட்டெடுப்பில் உக்ரைனுக்கு தென் பகுதியில் உள்ள நாடுகளின் ஆதரவு தேவை.

    இந்தியாவின் ஒத்துழைப்பும் எங்களுக்கு முக்கியம். எங்கள் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியதாக தெரிகிறது.

    மேலும், ரஷ்யாவின் நிலப்பகுதியில் ஒரு செ.மீ., கூட தாங்கள் உரிமை கொண்டாடவில்லை.

    எங்கள் நிலப்பகுதியை திரும்ப பெறவே நாங்கள் போராடுகிறோம் என்று கூறியுள்ளார்.

    தொடர்ந்து, 10 அம்ச அமைதி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.

    போரை முடிவிற்கு கொண்டுவர நியாயமான கேள்விகள் அதில் உள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவரும் எந்தவொரு வாய்ப்பினையும் உக்ரைன் வரவேற்கிறது.

    உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்ய படைகள் அனைத்தும் வெளியேற வேண்டும் என்றும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    உக்ரைன்
    இந்தியா

    சமீபத்திய

    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா
    விரைவில் டும்டும்டும்... அதுவும் காதல் திருமணம்தான்.. நடிகர் விஷால் வெளியிட்ட தகவல் விஷால்
    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா

    ரஷ்யா

    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? இந்தியா
    ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ன சொல்கிறார் புதின்? உலகம்
    மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி உலக செய்திகள்
    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் அமெரிக்கா
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா அமெரிக்கா

    இந்தியா

    ட்ரோன் மூலம் குக்கிராமத்தில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத் திறனாளி இந்தியா
    தங்கம் விலை இன்று சற்று சரிவு! இன்றைய விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    கேரளாவில் ஆற்றுப்பாலத்தில் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றில் வீசிச்செல்லும் காதலர்கள் கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025