NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி
    விளாடிஸ்லாவ் ரிப்னிகர் என்ற தொடக்கப் பள்ளியில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.

    14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி

    எழுதியவர் Sindhuja SM
    May 03, 2023
    06:55 pm

    செய்தி முன்னோட்டம்

    செர்பியாவின் பெல்கிரேடில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுவன் வகுப்பறைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பாதுகாவலர் கொல்லப்பட்டனர்.

    துப்பாக்கிசூடு நடத்திய ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கைது செய்யப்பட்டான் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    விளாடிஸ்லாவ் ரிப்னிகர் என்ற தொடக்கப் பள்ளியில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. சிறுவன் துப்பாக்கிசூடு நடத்துவதற்கு தனது தந்தையின் துப்பாக்கியைப் பயன்படுத்தினான் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது ஆறு குழந்தைகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆசிரியை ஒருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்.

    DETAILS

    செர்பியாவில் துப்பாக்கிச் சூடு நடப்பது மிக அரிதான விஷயமாகும்.

    துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து, ஹெல்மெட் மற்றும் குண்டு துளைக்காத அங்கிகளை அணிந்த போலீஸ் அதிகாரிகள் அந்த பகுதியை சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது.

    துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    முதலில் அந்த சிறுவன் ஆசிரியை சுட்டான். அதன் பிறகு, சீரற்ற முறையில் சரமாரியாக எல்லோரையும் சுடத் தொடங்கினான் என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

    செர்பியாவில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் இருப்பதால் அங்கு துப்பாக்கிச் சூடு நடப்பது மிக அரிதான விஷயமாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    உலகம்

    நாளை நிகழவிருக்கும் அரிய சூரிய கிரகணம்.. நாம் பார்க்க முடியுமா? இந்தியா
    பெனட்ரில் சேலஞ்சு: அமெரிக்க சிறுவனின் உயிரை பறித்த வைரல் டிக்டாக் சேலஞ்சு அமெரிக்கா
    மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முறைகேடு : 3வது இடத்தை பிடித்த வீராங்கனை தகுதி நீக்கம் விளையாட்டு
    நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன?  சீனா

    உலக செய்திகள்

    சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை  சீனா
    நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம்  அமெரிக்கா
    டைட்டானிக் நினைவு தினம்: தெரிந்ததும் தெரியாததும் உலகம்
    மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம்  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025