NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி
    14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி
    உலகம்

    14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி

    எழுதியவர் Sindhuja SM
    May 03, 2023 | 06:55 pm 0 நிமிட வாசிப்பு
    14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி
    விளாடிஸ்லாவ் ரிப்னிகர் என்ற தொடக்கப் பள்ளியில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.

    செர்பியாவின் பெல்கிரேடில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுவன் வகுப்பறைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பாதுகாவலர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு நடத்திய ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கைது செய்யப்பட்டான் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். விளாடிஸ்லாவ் ரிப்னிகர் என்ற தொடக்கப் பள்ளியில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. சிறுவன் துப்பாக்கிசூடு நடத்துவதற்கு தனது தந்தையின் துப்பாக்கியைப் பயன்படுத்தினான் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது ஆறு குழந்தைகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியை ஒருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி வருகிறார்.

    செர்பியாவில் துப்பாக்கிச் சூடு நடப்பது மிக அரிதான விஷயமாகும்.

    துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து, ஹெல்மெட் மற்றும் குண்டு துளைக்காத அங்கிகளை அணிந்த போலீஸ் அதிகாரிகள் அந்த பகுதியை சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். முதலில் அந்த சிறுவன் ஆசிரியை சுட்டான். அதன் பிறகு, சீரற்ற முறையில் சரமாரியாக எல்லோரையும் சுடத் தொடங்கினான் என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். செர்பியாவில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் இருப்பதால் அங்கு துப்பாக்கிச் சூடு நடப்பது மிக அரிதான விஷயமாகும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உலகம்
    உலக செய்திகள்

    உலகம்

    பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது  லண்டன்
    உக்ரைன் போர்: 5 மாதத்தில் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி உக்ரைன்
    காளி தேவியை அவமதிக்கும் படத்தை ட்வீட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டது உக்ரைன் அரசாங்கம்  இந்தியா
    அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது  இந்தியா

    உலக செய்திகள்

    ஜெருசலேம் தேவாலயத்தில் உள்ள 'அசையா ஏணி'யின் மர்மம் விலகியது வைரல் செய்தி
    எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறிய அமெரிக்கர் மரணம்! சீசனில் 4வது உயிரிழப்பு அமெரிக்கா
    முடிசூட்டு விழாவில் பிரிட்டன் சார்லஸ் அணியும் விலையுர்ந்த தங்க ஆடைகள்! பிரிட்டன்
    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023