NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / விதவிதமாக போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    விதவிதமாக  போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்!
    பிடிபட்ட பாகிஸ்தான் கடத்தல்காரர்கள்(படம்: Indian Coast Guard Twitter)

    விதவிதமாக போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 28, 2022
    10:36 am

    செய்தி முன்னோட்டம்

    ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் போதை பொருட்களைக் கடத்தி சென்ற ஒரு பாகிஸ்தான் கப்பல் நேற்று குஜராத் கடல் பகுதியில் பிடிபட்டது.

    இவர்களிடம் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் உட்பட பல்வேறு வெடி மருந்துகளும் ஆயுதங்களும் கைப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது பாகிஸ்தான் 'ட்ரோன்' ஊடுருவல் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்த ஆளில்லா விமானங்களை வைத்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் , போதைப் பொருட்கள் போன்றவை கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்திய எல்லையில் இருக்கும் கிராமங்களுக்கு இது போன்ற பொருட்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சப்ளை செய்து வருவதாகவும் அதற்காகவே அவர்கள் இந்த ட்ரோன்களைப் பயன்படுத்துவதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    ட்ரோன்

    அத்துமீறும் ட்ரோன்கள்!

    2021ஆம் ஆண்டில் 104 பாகிஸ்தான் ட்ரோன்கள் மட்டுமே அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தது. ஆனால், இந்த வருடம் 311க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளன.

    இது கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாகும்.

    இப்படி அத்துமீறி நுழைந்த ட்ரோன்கள் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு படையினரின் தரவுகளின் படி, 2022ஆம் ஆண்டு 492 யுஏவி மற்றும் 311 ட்ரோன்கள் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது.

    யுஏவிகள் பிடிபட்ட மாநிலங்கள்:

    பஞ்சாப்-369

    ஜம்மு-75

    ராஜஸ்தான்-40

    குஜராத்-8

    ட்ரோன்கள் பிடிபட்ட ஊர்கள்:

    பஞ்சாப்-164,

    குர்தாஸ்பூர் -96

    ஃபெரோஸ்பூர்-84

    அபோஹர்-25

    இதனையடுத்து, பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களிலும் 3,323 கி.மீ தூரத்திற்கு எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி! வைரல் செய்தி
    பிரதமர் மோடி பிறந்த ஊருக்கு உலகப் பாரம்பரிய நகரம் என்ற தகுதி! மோடி
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! கொரோனா
    கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு வழங்கும் சேவைகள் தமிழ்நாடு

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025