NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / விதவிதமாக போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்!
    உலகம்

    விதவிதமாக போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்!

    விதவிதமாக போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 28, 2022, 10:36 am 1 நிமிட வாசிப்பு
    விதவிதமாக  போதை பொருள் சப்ளை செய்யும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்!
    பிடிபட்ட பாகிஸ்தான் கடத்தல்காரர்கள்(படம்: Indian Coast Guard Twitter)

    ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் போதை பொருட்களைக் கடத்தி சென்ற ஒரு பாகிஸ்தான் கப்பல் நேற்று குஜராத் கடல் பகுதியில் பிடிபட்டது. இவர்களிடம் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் உட்பட பல்வேறு வெடி மருந்துகளும் ஆயுதங்களும் கைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது பாகிஸ்தான் 'ட்ரோன்' ஊடுருவல் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆளில்லா விமானங்களை வைத்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் , போதைப் பொருட்கள் போன்றவை கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்திய எல்லையில் இருக்கும் கிராமங்களுக்கு இது போன்ற பொருட்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சப்ளை செய்து வருவதாகவும் அதற்காகவே அவர்கள் இந்த ட்ரோன்களைப் பயன்படுத்துவதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    அத்துமீறும் ட்ரோன்கள்!

    2021ஆம் ஆண்டில் 104 பாகிஸ்தான் ட்ரோன்கள் மட்டுமே அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தது. ஆனால், இந்த வருடம் 311க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளன. இது கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாகும். இப்படி அத்துமீறி நுழைந்த ட்ரோன்கள் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரின் தரவுகளின் படி, 2022ஆம் ஆண்டு 492 யுஏவி மற்றும் 311 ட்ரோன்கள் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது. யுஏவிகள் பிடிபட்ட மாநிலங்கள்: பஞ்சாப்-369 ஜம்மு-75 ராஜஸ்தான்-40 குஜராத்-8 ட்ரோன்கள் பிடிபட்ட ஊர்கள்: பஞ்சாப்-164, குர்தாஸ்பூர் -96 ஃபெரோஸ்பூர்-84 அபோஹர்-25 இதனையடுத்து, பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களிலும் 3,323 கி.மீ தூரத்திற்கு எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    உலகம்

    19, 000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஐடி நிறுவனமான Accenture! ஆட்குறைப்பு
    உக்ரைன் போர் மத்தியில் ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புடின் AI புகைப்படங்கள் வைரல்! செயற்கை நுண்ணறிவு
    இன்னொரு அறிக்கையை வெளியிட இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம் அமெரிக்கா
    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை இந்தியா

    இந்தியா

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு ஆதார் புதுப்பிப்பு
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து ராகுல் காந்தி
    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023