NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்
    உலகம்

    அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்

    அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்
    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023, 04:40 pm 1 நிமிட வாசிப்பு
    அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்
    அமெரிக்காவில் விமான சேவை முற்றிலும் முடக்கம்

    அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, அமெரிக்க விமான போக்குவரத்து அமைப்பில் 'நோட்டம்' என்ற தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த நோட்டம் என்பது விமான ஓடுதளத்தில் விமானம் இறங்குவது மற்றும் அது தொடர்பான விவரங்களை விமானிக்கும், பிற விமான ஊழியர்களுக்கும் அளிக்கும் தொழில்நுட்பமாகும். இதனால் நேற்று அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, சர்வர் கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் அவசரமாக தரையிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. அதன்பேரில், ஏராளமான விமானங்கள் உள்ளூர் மற்றும் அண்டை விமான நிலையங்களில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டன. மேலும் 400விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

    விமான சேவை பாதிப்பால் பயணிகள் அவதி - கோளாறை சரிசெய்த நிபுணர்கள்

    இதனையடுத்து, உள்நாட்டு விமான இயக்கத்தை தாமதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதனால் நாடு முழுவதும் நேற்று விமான சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். தீவிர முயற்சிக்கு பின்னர், இந்த தொழில்நுட்ப கோளாறை நிபுணர்கள் சரிசெய்துள்ளார்கள். அதன் பின்னரே, விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பு கூறுகையில், 'அமெரிக்கா முழுவதும் வழக்கமான விமான போக்குவரத்துக்கள் படிப்படியாக மீண்டும் இயல்புக்கு திரும்புகிறது" என்று தெரிவித்தது. மேலும், விமானங்களை அவசரமாக தரையிறக்கும் அறிவிப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட காரணம் என்ன?, இதில் ஏதேனும் சதி உள்ளதா ? போன்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    அமெரிக்கா
    விமான சேவைகள்

    சமீபத்திய

    ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல் சென்னை சூப்பர் கிங்ஸ்
    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா

    அமெரிக்கா

    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை இந்தியா
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது உலகம்
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது உலகம்

    விமான சேவைகள்

    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் தமிழ்நாடு
    புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம் புதுச்சேரி
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன? தொழில்நுட்பம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023