NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்
    அமெரிக்காவில் விமான சேவை முற்றிலும் முடக்கம்

    அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் அவசரமாக தரையிறக்கம்

    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023
    04:40 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அதாவது, அமெரிக்க விமான போக்குவரத்து அமைப்பில் 'நோட்டம்' என்ற தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நோட்டம் என்பது விமான ஓடுதளத்தில் விமானம் இறங்குவது மற்றும் அது தொடர்பான விவரங்களை விமானிக்கும், பிற விமான ஊழியர்களுக்கும் அளிக்கும் தொழில்நுட்பமாகும்.

    இதனால் நேற்று அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, சர்வர் கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் அவசரமாக தரையிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

    அதன்பேரில், ஏராளமான விமானங்கள் உள்ளூர் மற்றும் அண்டை விமான நிலையங்களில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டன.

    மேலும் 400விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

    இயல்புக்கு திரும்பிய சேவை

    விமான சேவை பாதிப்பால் பயணிகள் அவதி - கோளாறை சரிசெய்த நிபுணர்கள்

    இதனையடுத்து, உள்நாட்டு விமான இயக்கத்தை தாமதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.

    இதனால் நாடு முழுவதும் நேற்று விமான சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    தீவிர முயற்சிக்கு பின்னர், இந்த தொழில்நுட்ப கோளாறை நிபுணர்கள் சரிசெய்துள்ளார்கள்.

    அதன் பின்னரே, விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இது குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பு கூறுகையில், 'அமெரிக்கா முழுவதும் வழக்கமான விமான போக்குவரத்துக்கள் படிப்படியாக மீண்டும் இயல்புக்கு திரும்புகிறது" என்று தெரிவித்தது.

    மேலும், விமானங்களை அவசரமாக தரையிறக்கும் அறிவிப்புகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட காரணம் என்ன?, இதில் ஏதேனும் சதி உள்ளதா ? போன்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமான சேவைகள்
    அமெரிக்கா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    விமான சேவைகள்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமானம்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! தமிழ்நாடு
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025