Loading...
உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்! இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தலைவர் முஜ்தபா காமேனி பரபரப்பு கடிதம்
இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தலைவர் முஜ்தபா காமேனி பரபரப்பு கடிதம்

உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்! இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தலைவர் முஜ்தபா காமேனி பரபரப்பு கடிதம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2026
08:27 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், ஈரானின் உச்ச மதத் தலைவர் முஜ்தபா காமேனி பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு முக்கிய எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பியுள்ளார். இதில், பிராந்திய நாடுகள் தங்களின் உண்மையான எதிரியை (அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்) அடையாளம் கண்டு, அவர்களின் திட்டங்களைப் புரிந்து கொண்டு ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுவெளி

பொதுவெளியில் தோன்றாத புதிய உச்ச தலைவர்

கடந்த பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கிய போது, ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவரது மகனான முஜ்தபா காமேனி ஈரானின் புதிய உயர் தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஆனால் பொறுப்பேற்றது முதல் இதுவரை அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்பதோடு, அவரது வீடியோ அல்லது ஆடியோ பதிவுகளும் வெளியிடப்படவில்லை.

இந்த சூழலில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த எழுத்துப்பூர்வ செய்தி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகள்

இஸ்லாமிய நாடுகளிடையே ஒற்றுமையின் அவசியம்

இஸ்லாமிய நாடுகளின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு வார்த்தைகளில் ஒற்றுமை, நட்பு மற்றும் நல்வழியில் ஒத்துழைப்பது மட்டுமே என தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தெரிந்தோ தெரியாமலோ, திட்டமிட்டோ அல்லது திட்டமிடாமலோ இஸ்லாமிய சமூகத்தில் பிளவையும் மோதலையும் உருவாக்குபவர் யாராக இருந்தாலும், அவர் இஸ்லாத்தின் எதிரிகளுக்குத் தொண்டு செய்கிறார் என்று எச்சரித்துள்ளார்.

பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களைக் களைந்து மீண்டும் இணையுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT

கொள்கை

உள்நாட்டு ஒற்றுமை மற்றும் பொருளாதாரக் கொள்கை

போரின் போது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கதார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் அண்டை நாடுகளுடனான உறவு பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், ஈரான் மக்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை மறந்து சமூக ஒற்றுமையைப் பேண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள ஈரானிய பொருளாதாரத்தில் டாலரின் பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

ADVERTISEMENT