NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்
    உலகம்

    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்

    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்
    எழுதியவர் Sindhuja SM
    Dec 15, 2022, 01:02 am 0 நிமிட வாசிப்பு
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான்
    தூக்கிலிடப்பட்ட மஜித்ரிசா ரஹ்நவர்டு (படம்: இந்து தமிழ்)

    ஈரானில் கடந்த 2 மாதங்களாக ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு போராட்டக்காரர்களில் ஒருவரான மொஷென் ஷெகாரிக்கு(23) என்பவருக்கு சென்ற வியாழக்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மஜித்ரிசா ரஹ்நவர்டு என்ற நபர் போராட்டத்தின் போது 2 ஈரான் பாதுகாப்பு படை வீரர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு நேற்று தூக்கிலிடப்பட்டுள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் கிரேன் இயந்திரம் மூலம் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

    ஈரான் போராட்டங்களும் மனித இழப்புகளும்

    1979ஆம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்கு பின் அந்த நாட்டில் ஆடைக் கட்டுப்பாடுகள் மிக தீவிரமாகக் கடைபிடிக்கபட்டு வருகிறது. இதனால், கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியாதற்காக மாஷா அமீனி(22) என்ற இளம்பெண் கைதுசெய்யப்பட்டு காவலில் இருந்த போதே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதனையடுத்து, ஈரான் நாடு முழுவதும் ஹிஜாப்பை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு படையினர் தாக்குதலால் 60 சிறுவர்கள் உட்பட 448 இதுவரை உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கிடையில், ஈரான் அரசு நான்கு நாட்கள் இடைவெளியில் 2 இளைஞர்களைத் தூக்கிலிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    ஈரான்

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    உலகம்

    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி இந்தியா
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா
    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்

    ஈரான்

    இன்று முதல், சென்னையில் துவங்கவிருக்கும் ஈரானிய படவிழா சென்னை
    ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு உலகம்
    ஈரான் விஷவாயு பிரச்சனை: மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் ஈரான் தலைவர் உலகம்
    பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023