NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு!
    மூளையை முடக்கும் 'நாக்லேரியா ஃபாவ்லேரி'(படம்: BBC Tamil)

    மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 27, 2022
    11:15 pm

    செய்தி முன்னோட்டம்

    மூளையை முடக்கும் 'நாக்லேரியா ஃபாவ்லேரி' என்ற நோயால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தென்கொரிய நாட்டை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தாய்லாந்தில் தங்கி இருந்துவிட்டு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி தன் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

    திரும்பிய அடுத்த நாளே இவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு 'நாக்லேரியா ஃபாவ்லேரி' நோய் இருப்பதை உறுதி செய்தனர்.

    அதன் பின், இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும், 21ஆம் தேதி சிகிச்சை பலன் இல்லாமல் இவர் உயிரிழந்தார்.

    27 Dec 2022

    நாக்லேரியா ஃபாவ்லேரி நோய் கிருமியின் விவரங்கள்:

    'ஒரு செல்' உயிரியான இந்த நோய் கிருமி, வெதுவெதுப்பான நன்னீரில் உருவாகி வளரக்கூடியது.

    சுவாசத்தால் மனித உடலுக்குள் நுழையும் இது, நேராக மூளையைப் பாதிக்க கூடியது.

    இந்த நோய் கிருமியை ஆராய்ந்து உலகிற்கு முதன் முதலில் சொன்னவர் ஆஸ்திரேலிய மருத்துவ நிபுணர் மால்கொம் ஃப்லோர் ஆவார்.

    இதுவரை, இந்த நோய் கிருமியின் தாக்கம் இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த கிருமி தாக்கினால் 97% மரணம் நேர்வது உறுதி .

    இந்த கிருமி மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது.

    அறிகுறிகள்:

    தலைவலி, காய்ச்சல், தும்மல் மற்றும் வாந்தி.

    முன்னெச்சரிக்கைகள்:

    கிருமி கண்டறியப்பட்ட பகுதிகளில் இருக்கும் ஏரிகளில் குளிப்பதைத் தவிர்க்கவேண்டும்.

    கோடையில் இந்த கிருமியின் வீரியம் அதிகமாக இருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    நோய்கள்

    சமீபத்திய

    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்

    நோய்கள்

    அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட தமிழ் திரைப்பட நடிகைகள் தமிழ் நடிகை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025