NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிசூடு: 8 பேர் பலி, 13 பேர் படுகாயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிசூடு: 8 பேர் பலி, 13 பேர் படுகாயம் 
    தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிசூடு: 8 பேர் பலி, 13 பேர் படுகாயம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 05, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    செர்பியாவில் 21 வயது நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.

    செர்பியாவின் தேசிய தலைநகர் பெல்கிரேடில் இருந்து தெற்கே 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மிலாடெனோவாக் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தி மக்கள் மீது சந்தேக நபர் கண்மூடித்தனமாக சுட்டதாக கூறப்படுகிறது.

    தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடந்த இரண்டு நாட்களில், செர்பியாவில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு இதுவாகும்.

    DETAILS

    இரண்டு நாட்களுக்கு முன் 13 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிசூடு

    கடந்த புதன்கிழமை, 13 வயது சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியைப் பயன்படுத்தி தனது பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

    அதில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பள்ளி காவலர் கொல்லப்பட்டனர்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோஸ்டா கெக்மனோவிச், தாக்குதலுக்குப் பிறகு தானே முன்வந்து காவல்துறையில் சரணடைந்தார் என்று கூறப்படுகிறது.

    1990களில் நடந்த போர்களின் விளைவாக செர்பியாவில் ஆயுதங்கள் வைத்திருப்பது சாதாரண விஷயம் என்றாலும், பெரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும்.

    இதற்கு முன் கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய செர்பியாவில் உள்ள ஒரு கிராமத்தில் துப்பாக்கிசூடு நடந்தது. அப்போது போர் வீரர் ஒருவர் 13 பேரை கொன்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உலகம்

    தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை! நாசா
    தனது சொந்த நகரத்தின் மீது 'தற்செயலாக' குண்டுகளை வீசிய ரஷ்யா ரஷ்யா
    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    இங்கிலாந்து இளரவசர் வில்லியம், உணவகத்தில் செய்த வேலை! வைரலாகும் வீடியோ  வைரலான ட்வீட்

    உலக செய்திகள்

    3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம் இது தான் - அறிக்கை! உலகம்
    சூப்பர்சோனிக் 'உளவு' ட்ரோன்களை அனுப்ப இருக்கும் சீனா: அமெரிக்க உளவுத்துறை  சீனா
    பெனட்ரில் சேலஞ்சு: அமெரிக்க சிறுவனின் உயிரை பறித்த வைரல் டிக்டாக் சேலஞ்சு அமெரிக்கா
    அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025