NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மகளிர் ஐபிஎல்லில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள்! பிசிசிஐ அதிரடி முடிவு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் ஐபிஎல்லில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள்! பிசிசிஐ அதிரடி முடிவு!
    மகளிர் ஐபிஎல்லில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள்

    மகளிர் ஐபிஎல்லில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள்! பிசிசிஐ அதிரடி முடிவு!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 21, 2023
    06:55 pm

    செய்தி முன்னோட்டம்

    பிசிசிஐ மகளிர் இந்தியன் பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் அசோசியேட் நாட்டைச் சேர்ந்த குறைந்தபட்சம் ஒரு கிரிக்கெட் வீராங்கனையுடன் ஆடும் லெவன் அணியில் ஐந்து வெளிநாட்டு வீரர்களை அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆடும் லெவன் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும் என்பதால், அசோசியேட் நாட்டு வீராங்கனையை சேர்ப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக பார்க்கப்படுகிறது.

    மகளிர் டி20 லீக் போட்டிகளை நடத்தும் எந்த ஒரு நாடுகளும் இதுபோல் இதற்கு முன்பு செய்ததில்லை.

    இதற்கிடையே, ரோஜர் பின்னி தலைமையிலான பிசிசிஐ, மகளிர் ஐபிஎல்லுக்கான சம்பள வரம்பாக ரூ.12 கோடியை நிர்ணயித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மகளிர் ஐபிஎல்

    மார்ச் 4 முதல் மகளிர் ஐபிஎல் தொடக்கம்

    மகளிர் ஐபிஎல் முதல் சீசன் இந்த ஆண்டு தொடங்கும் என்பது உறுதி செய்யப்பட்டாலும், போட்டியின் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    ஆனால் மகளிர் ஐபிஎல் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் என்றும், இறுதிப் போட்டி மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    அனைத்து போட்டிகளும் மும்பையின் பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் மட்டுமே வைத்து நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    அணிகளைப் பொறுத்தவரை, பிசிசிஐ வரும் ஜனவரி 25 அன்று மூடிய ஏல செயல்முறையின் மூலம் இறுதி செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கிரிக்கெட்

    ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்! இந்தியா
    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இந்தியா
    பிக் பாஷ் லீக் முடிந்தவுடன் ஓய்வு! கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன் அறிவிப்பு!! விளையாட்டு
    42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! ரஞ்சி கோப்பையில் சரித்திரம் படைத்த டெல்லி அணி! ரஞ்சி கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025