NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / FIDE ரேட்டிங்கில் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையை சமன் செய்தார் அர்ஜூன் எரிகைசி
    அடுத்த செய்திக் கட்டுரை
    FIDE ரேட்டிங்கில் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையை சமன் செய்தார் அர்ஜூன் எரிகைசி
    செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையை சமன் செய்தார் அர்ஜூன் எரிகைசி

    FIDE ரேட்டிங்கில் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தின் சாதனையை சமன் செய்தார் அர்ஜூன் எரிகைசி

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 01, 2024
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) அன்று ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டினார்.

    செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு பாரம்பரிய செஸ்ஸில் மதிப்புமிக்க 2800 எலோ மதிப்பீட்டைத் தாண்டிய இரண்டாவது இந்தியரானார்.

    2801 மதிப்பீட்டுடன் எரிகைசி இப்போது ஹிகாரு நகமுராவுக்கு (2802) பின்னால் சமீபத்திய சர்வதேச செஸ் தரவரிசையான FIDE தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

    கர்நாடகாவின் வாரங்கல்லைச் சேர்ந்தவரான அர்ஜூன் எரிகைசி ஆண்டு முழுவதும் அபாரமாக செயல்பட்டார்.

    45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி தனிநபர் மற்றும் குழு தங்கப் பதக்கங்களை வென்றார்.

    பாராட்டு

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு பாராட்டு

    உலக செஸ் நிர்வாக அமைப்பான FIDE, இந்த சாதனையை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தளத்தில், "அர்ஜூன் எரிகைசி வரலாற்றில் 2800 எலோ தடையை உடைத்த 16வது வீரர் ஆவார்" என்று கூறியுள்ளது.

    எரிகைசி தனது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை 14 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 13 நாட்களில் பெற்றார்.

    மேலும் செப்டம்பர் 2024 இல், அவர் இந்தியாவின் சிறந்த தரவரிசை வீரரானார். சர்வதேச அளவில், தரவரிசையில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 2831 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்திலும், அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா 2805 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

    இதற்கிடையில், இந்திய சதுரங்கம் தொடர்ந்து பிரகாசிக்கிறது. 18 வயதான டி குகேஷ் 2783 உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளையாட்டு
    செஸ் போட்டி
    விஸ்வநாதன் ஆனந்த்
    இந்தியா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    விளையாட்டு

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரருக்கு இரட்டிப்பு பதவி உயர்வு வழங்கியது இந்திய ரயில்வே ஒலிம்பிக்
    ஒலிம்பிக் 2024: நீரின் தரம் மோசமாக இருந்ததால் டிரையத்லான் போட்டியின் பயிற்சி அமர்வு ரத்து ஒலிம்பிக்
    ஒலிம்பிக் போட்டிகளில் பச்சை நிற பேனருக்கு அனுமதி மறுப்பு; பின்னணி இதுதான் ஒலிம்பிக்
    ஹாலிவுட் நடிகர்களின் இசை நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது பாரிஸ் ஒலிம்பிக் பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

    செஸ் போட்டி

    விஸ்வநாதன் ஆனந்தின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் கிராண்ட்மாஸ்டர்
    உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஆர்.பிரக்ஞானந்தா உலக கோப்பை
    செஸ் உலகக் கோப்பை: கேண்டிடேட்ஸ் போட்டியை அடைந்த மூன்றாவது இளைஞர் பிரக்ஞானந்தா  கிராண்ட்மாஸ்டர்
    உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் ஆட்டம் டிரா; இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா? பிரக்ஞானந்தா

    விஸ்வநாதன் ஆனந்த்

    குருவை விஞ்சிய சிஷ்யன்; WR செஸ் மாஸ்டர்ஸில் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா பிரக்ஞானந்தா
    திரைப்படமாகும் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை வரலாறு; இயக்குனர் யார் தெரியுமா? இயக்குனர்

    இந்தியா

    சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி; ஜார்கண்டில் பாஜகவுக்கு பின்னடைவு தேர்தல் முடிவு
    ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிந்தே அதன் பங்குகளை விற்றது அதானி; வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு அதானி
    இந்திய தேர்தலை பாத்து கத்துக்கணும்; கலிபோர்னியா வாக்கு எண்ணிக்கை 20 நாட்களாக நடப்பது குறித்து எலான் மஸ்க் கருத்து எலான் மஸ்க்
    1967க்கு பிறகு முதல்முறை; எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025